அபினிப் போர்கள்
From Wikipedia, the free encyclopedia
சீனா மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான தகராறுகளின் உச்சக்கட்டமாக, 1880 களின் மத்தியில் நிகழ்ந்த இரண்டு போர்கள், அபினிப் போர்கள் அல்லது ஆங்கிலோ-சீனப் போர்கள் என அழைக்கப்படுகின்றன. இரண்டாவது போரில் பிரான்சும், பிரித்தானியாவுக்குச் சார்பாகப் போரில் கலந்து கொண்டது. இந்தத் தகராறுக்கு அடிப்படையாக அமைந்தது, பிரித்தானிய இந்தியாவிலிருந்து அதிகரித்துவந்த அளவில் அபினி சீனாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்டமையாகும். சீனச் சமுதாயத்தில், உடல்நலம் மற்றும் சமுதாய வழக்கங்கள் ஆகியவற்றில் ஏற்பட்ட தீங்கான பாதிப்புக்கள் காரணமாக, கிங் பேரரசர் (Qing Emperor) அபினியைச் சீனாவில் தடை செய்தார். தனது நாட்டு எல்லைக்குள் அபினியைத் தடை செய்த பிரித்தானியப் பேரரசு, சீனாவுக்குள் அதனைத் தொடர்ந்து ஏற்றுமதி செய்தது. அந்த தடையையும் பொருற்படுத்தாது பிரித்தானியக் களங்கள் சீனாவுக்கும் அபினி வணிகத்தைத் தொடர்ந்தது. அதனால் அப்போது குவாங்தொவ் மாகாணத்தில் பணிபுரிந்த ஆளுநர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். அதுவே பிரித்தானியாவுக்கும் சீனப்பேரசுக்கும் இடையிலான போராகியது. அதனையே அபினிப் போர்கள் எனப்படுகின்றன.
அபினிப் போர்கள் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
குவாங்தோவ் (கண்டன்) துறைமுகப்பகுதியில் போர் |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
பிரித்தானியப் பேரரசு பிரான்சு பேரரசு (1856–1860) ஐக்கிய அமெரிக்கா (1856 and 1859) | சிங் அரசமரபு |