அரம்பையர்
இந்து, பௌத்தத் தொன்மங்களில் வரும் பெண்கள் / From Wikipedia, the free encyclopedia
அரம்பையர் அல்லது அப்சராக்கள் எனப்படுபவர்கள் இந்து, பௌத்தப் பழங்கதைகளில் வரும் பெண்கள். இவர்கள் அழகாகவும் தெய்வீக ஆற்றல் பெற்றவர்களாகவும் இருப்பர். இவர்கள் தேவ லோகத்தில் உமையம்மைக்கு துணையாக இருக்கும் தோழிகளாவர். இவர்கள் காந்தர்வர்களின் மனைவியர் ஆவர். சிறப்பாக நடனமாட வல்லவர்களான இவர்கள் கடவுளரின் சபையில் தம் கணவர்களது இசைக்கேற்ப நடனமாடுவர். இவர்கள் தாம் விரும்பியபடி தமது உருவத்தை மாற்றிக்கொள்ள முடியும் என்று கருதப்படுகிறது. ஊர்வசி, ரம்பை, மேனகை, திலோத்தமை ஆகியோர் நன்கு அறியப்பட்ட அப்சரசுகள். அப்சரசுகள் லவுகீக (பொருளுலக), தெய்வீக (கடவுள் தன்மையுடைய) அப்சரசு என இருவகையாகக் குறிக்கப்படுகின்றனர்.[சான்று தேவை] இவர்கள் பாற்கடலை கடையும் பொழுது தோன்றியவர்கள். இவர்களுக்கு அரம்பை தலைவியாக அறியப்படுகிறாள். அரம்பையர்கள் தேவ மகளீர், தேவ கன்னிகள், அப்சரஸ்கள் என்றும் அறியப்படுகிறாகள். ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை, கிருகத்தலை, சிகத்தலை, சகசந்திசை, பிரமலோசத்தி, அநுமுலோசை, கிருதாசி, விசுவாசி, உருப்பசி, பூர்வசித்தி என்ற சிலர் அவர்களில் புகழ்பெற்றவர்கள்.