அருணாசலம் தங்கத்துரை
From Wikipedia, the free encyclopedia
அருணாசலம் தங்கத்துரை (சனவரி 17, 1937 - சூலை 5, 1997) இலங்கையின் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 1970 முதல் 1977 வரை மூதூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் 1994 ஆம் ஆண்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 1997, சூலை 5 ஆம் நாள் திருகோணமலையில் வைத்து இனந்தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார்.
விரைவான உண்மைகள் அ. தங்கத்துரைநாஉ, இலங்கை நாடாளுமன்றம் for மூதூர் ...
அ. தங்கத்துரை | |
---|---|
![]() | |
இலங்கை நாடாளுமன்றம் for மூதூர் | |
பதவியில் 1970–1977 | |
இலங்கை நாடாளுமன்றம் for திருகோணமலை | |
பதவியில் 1994–1997 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1937-01-17)சனவரி 17, 1937 கிளிவெட்டி, மூதூர், இலங்கை |
இறப்பு | சூலை 5, 1997(1997-07-05) (அகவை 60) திருகோணமலை, இலங்கை |
தேசியம் | ![]() |
அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி |
முன்னாள் கல்லூரி | இலங்கை சட்டக் கல்லூரி |
தொழில் | வழக்கறிஞர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
மூடு