![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/45/Henry-VIII-kingofengland_1491-1547.jpg/640px-Henry-VIII-kingofengland_1491-1547.jpg&w=640&q=50)
இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி
16 - ம் நூற்றாண்டின் இங்கிலாந்து அரசர்களுல் ஒருவர் ஆவார் / From Wikipedia, the free encyclopedia
இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி (Henry VIII ஜூன் 28, 1491 – ஜனவரி 28, 1547), 21 ஏப்ரல் 1509-இலிருந்து தனது இறப்பு வரை இங்கிலாந்தின் அரசராக இருந்தவர். அயர்லாந்தின் அரசராகவும் இருந்தவர், பின்னர் பிரான்ஸ் இராச்சியத்துக்கு உரிமையும் கோரினார். தனது தந்தை இங்கிலாந்தின் ஏழாம் ஹென்றியின் பின், டியுடர் குலத்தின் இரண்டாம் அரசர் இவர். ஆங்கிலேய மன்னராட்சி வரலாற்றில் எட்டாம் ஹென்றி மிகப் பெரிய புள்ளியாக விளங்கினார்
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
எட்டாம் ஹென்றி Henry VIII | |
---|---|
![]() | |
இங்கிலாந்தின் அரசர் | |
ஆட்சிக்காலம் | 21 ஏப்ரல் 1509 – 28 சனவரி 1547 (37 ஆண்டுகள், 282 நாட்கள்) |
முடிசூட்டுதல் | 24 சூன் 1509 (அகவை 17) |
முன்னையவர் | ஹென்றி VII |
பின்னையவர் | எட்வர்ட் VI |
பிறப்பு | (1491-06-28)28 சூன் 1491 கிரீனிச் அரண்மனை, கிரீனிச் |
இறப்பு | 28 சனவரி 1547(1547-01-28) (அகவை 55) வைட்ஹால் அரண்மனை, லண்டன் |
வாழ்க்கைத் துணைகள் | அராகனின் கத்தரீன் ஆன் பொலெயின் ஜேன் சீமோர் கிளீவ்சின் ஆன் கத்தரீன் ஹவார்ட் கத்தரீன் பார் |
குழந்தைகளின் பெயர்கள் | மேரி I ஹென்றி ஃபிட்ஸ்ரோய் எலிசபெத் I எட்வர்ட் VI |
தந்தை | ஹென்றி VII |
தாய் | யோர்க்கின் எலிசபெத் |
மதம் | கிறித்தவம் (ஆங்கிலிக்கன், முன்னர் ரோமன் கத்தோலிக்கம்) |
கையொப்பம் | ![]() |
ஆறு முறை மணந்ததற்காக மட்டுமன்றி அவர் இங்கிலாந்து திருச்சபையை காத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிரித்து இங்கிலாந்து வரலாற்றில் அவர் முத்திரை பதித்துள்ளார். திருத்தந்தையின் தலைமையில் இங்கிலாந்தில் இயங்கிய திருச்சபையை ஹென்றி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தன்னைத் தானே அதன் தலைவராக அறிவித்தார். அதோடு, இங்கிலாந்தில் உள்ள அத்தனை காத்தோலிக்க துறவு மடங்களை அடியோடு ஓழித்தார். மேலும் அவர் ஆலய வழிபாட்டு முறைகளை மாற்றி அமைத்தார். இவை யாவும் செயவதர்கு முன்பு அவர் ஒரு தீவிர காத்தோலிகர் என்பது குறிக்கத்தக்கது;
எட்டாம் ஹென்றியைப் பற்றிய வரலாற்றுச் சான்றுகள் அவர் ரம்யமான, வசீகரமான, கம்பீரமான தோற்றம் கொண்டவராக வர்ணிக்கின்றன.சர்வாதிகாரியாக அவர் இங்கிலாந்தை ஆண்டர்; அப்படிப்பட்ட ஆட்சியை நடத்திய கடைசி மன்னராக இதுவரை இருக்கக் கூடும்.
தனது அகம்பாவத்திற்காக மட்டுமின்றி தனக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காகவும் அவர் ஆறுமுறை மணந்துகொண்டார். தனது நாட்டை ஆட்சி செய்ய ஒரு பெண்ணுக்கு போதிய வலிமை இல்லை என்று உறுதியாக் நம்பினார். இருப்பினும் இருதிவரை அவருக்கு ஆண்வாரிசு பிறக்கவில்லை. ஆறு திருமணங்கள் புரிந்ததோடு அவர் புரடஸ்தந்தம் இங்கிலாந்தின் தேசிய மதமாகுவதற்கு மறைமுகக் காரணமாகவும் இருந்ததால் அவர் இன்றும் ஆங்கில உலகத்தில் பேசப்பட்டு வருகிறார். அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில் பார்ப்போருக்கு அறுவறுப்பை அள்ளி வீசும் அளவிற்கு பருமனாக வளர்ந்தார்; பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டார். ஆணவக்காரன்,பைத்தியக்காரன், காமவெறியன், ஈரமற்றவன், கொடுங்கோலன், தாழ்வு மனப்பான்மை கொண்டவன் என்று பலர் அவரைப்பற்றி தூற்றினர்.
ஆறு பெண்களை ஒன்றன் பின் ஒன்றாக மணந்துகொண்டது, அவர்களில் இரவரின் தலையை வெட்டி மரண தண்டனை கொடுத்தது, ஆகிய அவரது செயல்களை ஒட்டி பல புதின புத்தகங்கள், நாடகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவை படைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் மூலம் எட்டாம் ஹென்றி இன்றும் சாதாரண ஆங்கிலேய மக்களிடையே ஒரு பிரபல வரலாற்று நபராகப் பேசப்படுகிறார்.