இயேசுவை அடக்கம் செய்தல்
From Wikipedia, the free encyclopedia
இயேசுவை அடக்கம் செய்தல் என்பது விவிலியத்தின் இயேசுவின் சாவுக்குப்பின்பு அவரின் உடலை அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு அடக்கம் செய்த நிகழ்வினைக்குறிக்கும். இது கத்தோலிக்க சிலுவைப் பாதையின் பதினான்காம் நிலை ஆகும். கிறித்துவின் வாழ்க்கையினை சித்தரிக்கும் கலைவடிவில் இந்த நிகழ்வு மிக முக்கியத்துவம் பெறுகின்றது.