இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் பதின்மூன்றாவது திருத்தம்
From Wikipedia, the free encyclopedia
இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் பதின்மூன்றாவது திருத்தம் (Thirteenth Amendment (13A) to the Constitution of Sri Lanka) என்பது இலங்கையில் மாகாண சபைகளை உருவாக்குவதற்காக அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தச் சட்டமூலம் ஆகும்.[1] இத்திருத்தச் சட்டமூலத்தின் படி, சிங்களம், தமிழ் ஆகிய மொழிகள் நாட்டின் அதிகாரபூர்வ மொழிகள் ஆகவும் ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் ஆக்கப்பட்டது.[2]