ஈழப் போர்
இலங்கை உள்நாட்டு போர் / From Wikipedia, the free encyclopedia
ஈழப் போர் அல்லது இலங்கை உள்நாட்டுப் போர் (Sri Lankan Civil War) என்பது இலங்கை இனப்பிரச்சினை காரணமாக, தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட்ட இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்களையும், போர்களையும் முதன்மையாகக் குறிக்கின்றது. இப்போரானது சிங்களவருக்கும், தமிழருக்கும் இடையில் பல விடயங்கள் தொடர்பாக நிலவிவரும் பாரிய கருத்து முரண்பாடுகளின் மூலத்தைக் கொண்டதாகும். 23 யூலை 1983 முதல் 26 ஆண்டுகள் நடைபெற்ற இப்போர் 2009 இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.[1]
இலங்கை உள்நாட்டுப் போர் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
இலங்கைத் தீவு |
||||||||||
|
||||||||||
பிரிவினர் | ||||||||||
இலங்கை இராணுவம் | தமிழீழ விடுதலைப் புலிகள் ஈழ இயக்கங்கள் | இந்திய அமைதி காக்கும் படை (1987–90) | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | ||||||||||
ஜே.ஆர். (1983–89)
ஆர்.பிரேமதாசா (1989-93) † | வே. பிரபாகரன் (1983-2009) † செல்வராசா பத்மநாதன் (2009) (கைதி) | ரா. வெங்கட்ராமன் (1987–90) ராஜீவ் காந்தி (1987–89) † |
||||||||
பலம் | ||||||||||
இலங்கை ஆயுதப்படைகள்: 95,000 (2001) 118,000 (2002) 158,000 (2003) 151,000 (2004) 111,000 (2005) 150,900 (2006)[2] | தமிழீழ விடுதலைப் புலிகள் (துணைப்படைகள் தவிர்த்து): 6,000 (2001) 7,000 (2003) 11,000 (2005) 8,000 (2006) 15,000 (2007)[2][3] (துணைப்படைகள் உட்பட): 25,000 (2006) 30,000 (2008)[4] | இந்திய அமைதி காக்கும் படை: 100,000 (உச்சம்) |
||||||||
இழப்புகள் | ||||||||||
28,708-32,000 சாவு 5000+ காணவில்லை 111,655+ காயம் (இராணுவம், காவற் துறை)[5][6][7] | 27,000 விடுதலைப் புலிகள் மற்றும் ஈழ இயக்கங்கள்[8][9][10][11] 11,644 விடுதலைப் புலிகள் பிடிபட்டனர்[12] | 1,200 சாவு (இந்திய அமைதி காக்கும் படை)[13] |
||||||||
100,000+ பொதுமக்கள் சாவு (கணக்கீடு)[14] |
27 ஆண்டுகளுக்கு மேலாக இப்போராட்டம் இலங்கை மக்களுக்கு கடும் துன்பத்தையும், சூழல், பொருளாதார ரீதியாக நாட்டிற்கு இழப்பையும் ஏற்படுத்தி 100,000 க்கு மேற்பட்ட மக்கள் இறப்புக்கும் காரணமாகியது.[14] போரின் ஆரம்ப காலத்தில் இலங்கைப் படைகள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை மீளவும் கைப்பற்ற முனைந்தனர். அரசுக்கு எதிராக புலிகள் மேற்கொண்ட உத்திகள் தடையாக இருந்தாலும், புலிகளை அமெரிக்கா, இந்தியா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட் 32 நாடுகள் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டனர். இலங்கை அரச படைகள் திட்டமிட்ட மோசமான மனித உரிமை மீறல், பலவந்தமாக காணாமல் போதல், நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள் என்பவற்றுக்காக குற்றம் சாட்டப்பட்டனர்.[15]
இரு தசாப்தங்களாக போர் மற்றும் தோல்வியுற்ற நான்கு சமாதானப் பேச்சு வார்த்தைகள், மற்றும் 1987 - 1990 காலப்பகுதியில் இலங்கையில் நிலை கொண்ட இந்தியப் படைகளின் தோல்வியில் முடிந்த பிரசன்னம் என்பவற்றின் பின் மார்கழி 2001 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டு, சர்வதேச மத்தியஸ்துடன் போர் நிறுத்தம் 2002 இல் மேற்கொள்ளப்பட்டது.[16] ஆயினும், 2005 பிற்பகுதியில் முரண்பாடு ஆரம்பமாகி, பின்னர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக யூலை 2006 இல் அரசு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் புலிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியேற வேண்டி ஏற்பட்டது.[17][18]
2007 இல் அரசாங்கம் தாக்குதலை வடபகுதிக்கு மாற்றி, 10,000 க்கு மேற்பட்ட தடவைகள் புலிகள் போர் நிறுத்தத்தை மீறியதாக குற்றச்சாட்டி ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது.[19] இதன் மூலம் புலிகளின் தங்கள் தலைமைச் செயற்பாட்டிடமாக கொண்டிருந்த கிளிநொச்சி, பிரதான இராணுவ மையமாக இருந்த முல்லைத்தீவு, முழு ஏ9 நெடுஞ்சாலை ஆகிய இடங்களைக் கைப்பற்றி,[20] தமிழீழ விடுதலைப் புலிகள் 17 மே 2009 அன்று தோல்வியுற்றனர்.[21] இதன் பின்னர் ஐ.நா.வினால் இலங்கை அரசும் புலிகளும் போர்க் குற்றம் புரிந்ததாக குற்றஞ் சாட்டப்பட்டனர். இதற்கான பதில் கூறலில் விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில் இலங்கை அரசு நெருக்கடிகளுக்கு உட்பட்டு வருகின்றது.