கி. வீரமணி
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
கி. வீரமணி (K. Veeramani, பிறப்பு: 02 டிசம்பர் 1933) திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராக முழு நேரமும் கட்சிப் பொறுப்பை கவனிக்கும் விதத்தில் பெரியாரால் 1962 இல் நியமிக்கப்பட்டவர்.[சான்று தேவை] பெரியாரின் மறைவுக்குப்பின்பும், மணியம்மையாரின் மறைவுக்குப்பின்பும் தொடர்ந்து இயக்கத்தை நடத்தி வருகிறார்.[சான்று தேவை] 2003 ஆம் ஆண்டு முதல் திராவிடர் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுச் செயல்படுகிறார்.[சான்று தேவை] ஆங்கிலத்தில் (The Modern Rationalist) மாத இதழ், தமிழில் விடுதலை (நாளேடு), உண்மை (மாதமிருமுறை ஏடு), பெரியார் பிஞ்சு (குழந்தைகளுக்கான மாத ஏடு) ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்து வருகிறார். பெரியார் அறக்கட்டளை மூலம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். தமிழகத்தையும் தாண்டி வெளிநாடுகளிலும் பெரியாரின் கொள்கைகளை பரப்பி வருகிறார்.[சான்று தேவை]
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
தகைசால் தமிழர் கி. வீரமணி | |
---|---|
கி. வீரமணி | |
தலைவர், திராவிடர் கழகம் | |
முன்னையவர் | மணியம்மை |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 திசம்பர் 1933 (1933-12-02) (அகவை 90) கடலூர் முதுநகர், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது தமிழ்நாடு, இந்தியா) |
அரசியல் கட்சி | திராவிடர் கழகம் |
துணைவர் | மோகனா |
பிள்ளைகள் | அன்புராஜ் மற்றும் ஒரு மகன் & 2 மகள்கள் |
இணையத்தளம் | http://kveeramani.com http://kveeramani.com/childprodigy-ta.php |