குழூஉக்குறி
From Wikipedia, the free encyclopedia
குழூஉக்குறி என்பது ஒரு குறிப்பிட்ட துறையைச் சேர்ந்தவர் அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவினர் தங்களுக்குள் மட்டும் பொருள் விளங்கிக் கொள்ளும் படியாகப் பயன்படுத்தும் சொற்கள் ஆகும். இது தகுதிச் சொல் வழக்கின் மூவகைகளுள் ஒன்று. மங்கலம் மற்றும் இடக்கர் அடக்கல் இதர இரண்டாகும். யானைப் பாகர்கள், விவசாயிகள், வணிகர்கள், கலைஞர்கள், தமிழ் மருத்துவர் முதலியோர் பேசும் சில சொற்கள் அத்துறை சார்ந்தோருக்கே புரியும்.