சென்னை புறநகர் பேருந்து நிலையம்
ஆசிய கண்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம் / From Wikipedia, the free encyclopedia
சென்னை புறநகர் பேருந்து நிலையம் (அதிகாரப்பூர்வமாக புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம்)[1] அல்லது பரவலாக கோயம்பேடு பேருந்து நிலையம் என்பது இந்தியாவின், சென்னை மாநகரின் கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும். 37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பேருந்து நிலையம், ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரியதாகும்.[2] ஐ. எஸ். ஓ 9001:2000 தரச் சான்றிதழும் இப்பேருந்து நிலையம் பெற்றுள்ளது.[2]
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் சென்னை புறநகர் பேருந்து நிலையம் | |
---|---|
சென்னைப் புறநகர் பேருந்து நிலையத்தின் முதன்மை முகப்பு | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | உள் வட்டச் சாலை, கோயம்பேடு, சென்னை |
ஆள்கூறுகள் | 13.06745°N 80.20566°E / 13.06745; 80.20566 |
உரிமம் | சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் |
நடைமேடை | 160 |
இணைப்புக்கள் | கோயம்பேடு மெட்ரோ நிலையம் (கட்டமைப்பில்) |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | உள்ளது |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது |
மாற்றுத்திறனாளி அணுகல் | ஆம் |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 2002 |
பயணிகள் | |
பயணிகள் | நாள் ஒன்றுக்கு 8,00,000 முதல் 10,00,000/வரை |
கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கும் தெற்காசிய விளையாட்டுகளுக்காக கட்டப்பட்ட சிற்றூருக்கும் இடையே உள்வட்டச் சாலை (சவகர்லால் நேரு சாலை)யில் அமைந்துள்ள இப்பேருந்து நிலையம் 103 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.[3] இதனை நவம்பர் 18, 2002 இல் அன்றைய முதல்வர் புரட்சி தலைவி டாக்டர்அம்மாஜெ. ஜெயலலிதா அவர்கள் திறந்து வைத்தார். 2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாளன்று, அப்போதைய தமிழக முதல்வராக இருந்த புரட்சி தலைவி டாக்டர் அம்மா ஜெயலலிதா அவர்களால் நிறுவப்பட்டது.[4] இப்பேருந்து நிலையம் ஒரே சமயத்தில் 270 பேருந்துகளையும், நாளொன்றுக்கு 2000 பேருந்துகளையும் 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது.[3]
இந்தப் பேருந்து நிலையத்தின் பின்புறம் சென்னை மெட்ரோ தனது இருக்கைப் பெட்டிகள் பணிமனையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.