சமாதி (பதஞ்சலி)
From Wikipedia, the free encyclopedia
சமாதி (பதஞ்சலி) என்பது தியானிக்கப்படும் பொருளின் வடிவம் அல்லது புறப்பகுதியானது விடப்படும் பொழுது இந்த சமாதி நிலையானது ஏற்படுகிறது. அதாவது எந்த வடிவமும் இன்றி கருத்தை மட்டும் உணரும் நிலையை அடைந்து விட்டால் தியானத்தின் அந்த நிலையை சமாதி என்பார் பதஞ்சலி முனிவர். தியானதில் தன்னைப் பற்றிய, தியானிக்கப்படும் பொருள் பற்றிய மற்றும் தியானம் செய்யும் முறை பற்றிய கவனமானது இருக்கும்.
ஆனால் சமாதியில் தன்னைப் பற்றியும், தியானம் செய்யும் முறை பற்றிய அறிவானதும் அகன்று தியானிக்கப்படும் பொருள் ஒன்றுதான் மனதில் இருப்பதைப் போன்ற அனுபவமானது ஏற்படும். பதஞ்சலி முனிவர் சமாதியை சவிகல்ப சமாதி என்றும் நிர்விகல்ப சமாதி என்றும் இரண்டாக பிரித்து விளக்கியுள்ளார்.