![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f2/Sardar_patel_%2528cropped%2529.jpg/640px-Sardar_patel_%2528cropped%2529.jpg&w=640&q=50)
வல்லபாய் பட்டேல்
இந்திய விடுதலைப் போராட்டக் குசராத்தியர் / From Wikipedia, the free encyclopedia
சர்தார் வல்லப்பாய் படேல் (அக்டோபர் 31, 1875 - டிசம்பர் 15, 1950) (Sardar Vallabhbhai Jhaverbhai Patel, குஜராத்தி: વલ્લભભાઈ પટેલ, இந்தி: सरदार वल्लभभाई पटेल) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார்.[1]
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
சர்தார் வல்லப்பாய் படேல் | |
---|---|
![]() | |
1வது இந்திய துணைப் பிரதமர் | |
பதவியில் 15 ஆகத்து 1947 – 15 டிசம்பர் 1950 | |
முன்னையவர் | உருவாக்கப்பட்டது |
பின்னவர் | மொரார்ஜி தேசாய் |
இந்தியாவின் உள்துறை அமைச்சர் | |
பதவியில் 15 ஆகஸ்டு 1948 – 15 டிசம்பர் 1950 | |
பிரதமர் | ஜவகர்லால் நேரு |
முன்னையவர் | உருவாக்கப்பட்டது |
பின்னவர் | சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1875-10-31)31 அக்டோபர் 1875 நடீயாத், மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா (இப்போது இந்தியா) |
இறப்பு | 15 திசம்பர் 1950(1950-12-15) (அகவை 75) மும்பை, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிள்ளைகள் | மனிபன் படேல், தாயாபாய் படேல் |
முன்னாள் கல்லூரி | மிடில் டெம்பில் |
தொழில் | வழக்கறிஞர் |
சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து, இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்றும் இந்தியாவின் பிஸ்மார்க் என்றும் அழைக்கப்பட்டார்.