தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா
பிரித்தானிய இந்தியப் பேரரசு காலத்தில் வெளியிடப்பட்ட விவர நூல் / From Wikipedia, the free encyclopedia
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா என்பது இந்தியா குறித்து பிரித்தானிய இந்தியப் பேரரசு காலத்தில் வெளியிடப்பட்ட விவர நூல் ஆகும். இது இப்போது ஒரு வரலாற்று குறிப்புப் படைப்பாக பயன்படுகிறது. இது முதன்முதலில் 1881 இல் வெளியிடப்பட்டது. இந்த புத்தகங்களுக்கான திட்டத்தை சர் வில்லியம் வில்சன் ஹண்டர் 1869 இல் தொடங்கி உருவாக்கினார்.
1908, 1909, 1931 ஆகிய ஆண்டுகளில் இந்நூலின் "புதிய பதிப்புகள்" இந்தியாவின் புவியியல், வரலாறு, பொருளாதாரம், நிர்வாகம் போன்றவற்றை உள்ளடக்கியதாக நான்கு கலைக்களஞ்சிய தொகுதிகளாகவும், மேலும் இருபது தொகுதிகளில் அகர வரிசைப்படி இடங்களின் பெயர்களின் பட்டியல், புள்ளிவிவரங்கள் சுருக்கமான தகவல்கள் போன்வற்றைக் கொண்ட விவர நூலாக உள்ளது. ஒ்வொரு தொகுதியிலும் வரைபடங்களைக் கொண்டும் உள்ளது. புதிய பதிப்புகள் அனைத்தும் இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் யபல்கலைக்கழக பதிப்பக்தால் வெளியிட்டன.