திருச்சிராப்பள்ளி மாநகராட்சி
இது தமிழக 21 மாநகராட்சிகளுள் மூன்றாவது மிகப்பெரிய மாநகராட்சி ஆகும் / From Wikipedia, the free encyclopedia
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான திருச்சிராப்பள்ளி மாவட்ட மாநகராட்சியாகும். இது உள்ளாட்சி அமைப்பின்படி ஒரு மாநகராட்சி ஆகும். தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூருக்கு அடுத்த மூன்றாவது மிகப்பெரிய மாநகராட்சி இதுவே ஆகும். இந்த மாநகராட்சி 167.23 ச.கி.மீட்டர் கொண்ட பரந்து விரிந்த தமிழகத்தின் மூன்றாவது பெரிய மாநகராட்சி ஆகும். இது முதன்முதலில் நகராட்சியாக நிறுவப்பட்டது 08.07.1866. பின் மாநகராட்சியாக 01.06.1994 அன்று தரம் உயர்த்தப்பட்டது. இந்த மாநகராட்சியை ஒட்டியுள்ள துவாக்குடி, திருவெறும்பூர் நகராட்சிகளை திருச்சியுடன் இணைக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதனடிப்படையில் இந்த மாநகராட்சி நான்கு மிகப்பெரிய மண்டலங்களையும் நூறு (100) வார்டுகளையும் கொண்டுள்ளது. இந்த மாநகராட்சி சென்னை, கோயம்புத்தூர் மாநகராட்சிகளைப் போலவே பல நகராட்சிகளைக் கொண்டுள்ளது. அதனடிப்படையில் அரியமங்கலம்,அபிஷேகபுரம்,பொன்மலை, திருவரங்கம், துவாக்குடி, ஆகிய நகராட்சிகளையும் திருவெறும்பூர் பேரூராட்சிகளையும் உள்ளடக்கி உள்ளது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பெருநகர மாநகராட்சியாக இல்லாத போதிலும் ஆண்டு வரி வருவாய் 615 கோடி ரூபாய் ஈட்டுகிறது. இது தமிழக மாநகராட்சிகளின் வரி வருவாயில் மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி எங்களின் பணி தங்களுக்கே | |
---|---|
வகை | |
வகை | |
தலைமை | |
மேயர் | |
துணை மேயர் | |
மாநகராட்சி ஆணையாளர் | இரா.வைத்திநாதன், இ.ஆ.ப |
மாவட்ட ஆட்சியர் | மா.பிரதீப் குமார், இ.ஆ.ப |
கூடும் இடம் | |
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக் கட்டிடம் | |
வலைத்தளம் | |
www |