தேசிய அருங்காட்சியகம், புது தில்லி
From Wikipedia, the free encyclopedia
தேசிய அருங்காட்சியகம், புது டில்லி இந்தியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகம் ஆகும். இங்கே வரலாற்றுக்கு முந்திய காலத்தைச் சேர்ந்த பொருட்களிலிருந்து தற்காலக் கலைப்பொருட்கள் வரை உள்ளன. இது இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சின் கீழ் இயங்கி வருகிறது. இந்த அருங்காட்சியகம், ஜன்பாத்தும், மௌலானா ஆசாத் சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...
நிறுவப்பட்டது | 1947 |
---|---|
அமைவிடம் | புது டில்லி, இந்தியா |
வலைத்தளம் | புது டில்லி தேசிய அருங்காட்சியகத்தின் இணையத்தளம் |
மூடு
இந்த அருங்காட்சியகத்திடம் இந்தியாவையும், வெளிநாடுகளையும் சேர்ந்த 200,000 க்கு மேற்பட்ட பொருட்கள் உள்ளன. இவை 5,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இந்தியாவின் பண்பாட்டு மரபினை விளக்குவனவாக உள்ளன. இங்குள்ள சேமிப்புக்களில் தொல்லியல் பொருட்கள், படைக்கலங்கள், அழகூட்டற் கலைப் பொருட்கள், அணிகலன்கள், கையெழுத்துப் பிரதிகள், ஓவியங்கள் போன்றவை அடங்குகின்றன.