பாம்பன் பாலம்
From Wikipedia, the free encyclopedia
பாம்பன் பாலம் (Pamban Bridge) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு கடல்வழி தொடர் வண்டி பாலமாகும். பாக் நீரிணையில் அமைந்துள்ளள இந்தப் பாலம் இந்திய பெருநிலப்பரப்பையும் இராமேசுவரம் தீவையும் இணைக்கின்றது.
பாம்பன் பாலம் | |
---|---|
பாம்பன் கடல் பாலம் | |
தாண்டுவது | பாக்கு நீரிணை |
இடம் | ராமேஸ்வரம், தமிழ்நாடு, இந்தியா |
அமைவு | 9°16′56.70″N 79°11′20.1212″E |
1914 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த இக்கடல் பாலத்தில், கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலதின் நடுவில் திறக்கும் கத்திரி வடிவ தூக்குகள் அமைந்துள்ளன. ஏறத்தாழ 2.3 கி.மீ. நீளமுள்ள இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். 2010 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள பாந்திரா-வொர்லி கடற்பாலம் திறப்பதற்கு முன்பு வரை இது இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமாக இருந்தது. பாம்பன் தொடர் வண்டி பாலத்திற்கு அருகில் 1988 ஆம் ஆண்டு ஒரு சாலை போக்குவரத்துப் பாலம் திறக்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டில், தற்போதுள்ள பாலத்திற்கு அருகில் ஒரு புதிய பாலத்தை கட்டும் பணி தொடங்கியது. 2022 ஆம் ஆண்டு திசம்பரில், கடல் அரிப்பின் காரணமாக தொடருந்துப் பாலம் பலவீனமடைந்ததால், பாலத்தின் மீது தொடர் வண்டி போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.