பெட்டாலிங் மாவட்டம்
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
பெட்டாலிங் மாவட்டம் (Petaling District) மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டம் ஆகும். பெட்டாலிங் மாவட்டம் 1974-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-இல் நிறுவப்பட்டது. அதே நாளில்தான் கோலாலம்பூர் மாநகரம் ஒரு கூட்டர்சு நிலப்பகுதியாக அறிவிக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் பெட்டாலிங் மாவட்டம்Daerah Petaling, நாடு ...
பெட்டாலிங் மாவட்டம் Daerah Petaling | |
---|---|
சிலாங்கூர் | |
பெட்டாலிங் மாவட்டம் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 3°05′N 101°35′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
தொகுதி | பண்டார் பாரு பாங்கி |
நகராட்சி | பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (கிழக்கு) சா ஆலாம் மாநகராட்சி (மேற்கு) சுபாங் ஜெயா மாநகராட்சி (தெற்கு) |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | மிசுரி இட்ரிசு |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,700 km2 (1,800 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 22,98,123 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 40xxx, 43xxx, 46xxx, 47xxx |
தொலைபேசி எண்கள் | +6-03-5, +6-03-6, +6-03-7, +6-03-8 |
வாகனப் பதிவெண்கள் | B |
மூடு
இந்த மாவட்டம் மலேசியத் தலைநகரை ஒட்டியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கின் நடுவில் அமைந்துள்ளது. இதனால் இந்த மாவட்டத்தில் மிகப்பெரிய ஒரு நகரமயமாக்கல் ஏற்பட்டுள்ளது. 1991-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 633,165 பேர் வசிப்பதாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.