மகிழ்மதி
From Wikipedia, the free encyclopedia
மகிழ்மதி அல்லது மகிஷ்மதி (Mahishmati) இராமாயணம், மகாபாரதம் காவியங்கள் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்கள் கூறும் மத்திய இந்தியாவில் தற்கால மத்தியப் பிரதேசத்தில் இருந்த அவந்தி நாட்டின் பண்டைய நகரம் ஆகும். அனுப நாட்டின் தலைநகராக மகிழ்மதி நகரம் இருந்ததாகக் கருதப்படுகிறது. இந்நகரத்தின் தற்காலப் பெயர் மஹேஷ்வர் நகரம் ஆகும்.
பலர் மகிழ்மதி நகரம் தற்கால மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாயும் நர்மதா ஆற்றின் கரையில் அமைந்திருந்ததாக கருதுகிறார்கள்.