மதுரை மாநகராட்சி
இது தமிழக 21 மாநகராட்சிகளுள் நான்காவது பெரிய மாநகராட்சி ஆகும் / From Wikipedia, the free encyclopedia
மதுரை மாநகராட்சி என்பது தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பின் படி ஓர் மாநகராட்சி ஆகும். தமிழ்நாட்டின் சென்னை, கோயம்புத்தூருக்கு அடுத்த மூன்றாவது பெரிய மாநகரம் ஆகும். இது மொத்தம் நூறு (100) வார்டுகளைக் கொண்டுள்ளது. சுமார் 147 சதுர கி.மீ கொண்ட இந்த மாநகராட்சி தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூருக்கு அடுத்த மூன்றாவது பெரிய மாநகராட்சியும் ஆகும். இந்த மாநகராட்சி சென்னை, கோயம்புத்தூர் மாநகராட்சிகளைப் போல சில நகராட்சிகளை உள்ளடக்கி உள்ளது. அவை ஆனையூர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் நகராட்சிகள் ஆகும். இந்த மாநகராட்சி வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு, மத்திய என மொத்தம் ஐந்து மண்டலங்களைக் கொண்டுள்ளது. இந்த மாநகராட்சி ஆண்டு வரி வருவாயில் 586 கோடி ரூபாய் வரி வசூல் செய்கிறது.இது தமிழக வரி வசூல் வருவாயில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.
மதுரை மாநகராட்சி | |
---|---|
வகை | |
வகை | |
தலைமை | |
மேயர் | திருமதி.வி.இந்திராணி பொன்வசந்த், திமுக |
ஆணையாளர் | திரு. சிம்ரன் ஜீத் சிங், இ.ஆ.ப |
துணை மேயர் | திரு. டி. நாகராஜன், சிபிஎம் |
துணை ஆணையாளர் | எஸ். சங்கீதா |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 100 |
அரசியல் குழுக்கள் | ஆளும் கட்சியினர் (80)
எதிர் கட்சியினர் (16) மற்றவர்கள் (4)
|
கூடும் இடம் | |
அறிஞர் அண்ணா மாளிகை (மதுரை மாநகராட்சியின் தலைமையகம்) | |
வலைத்தளம் | |
www |
இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான மதுரை மாவட்டத்தின் தலைநகராக உள்ள மதுரை உள்ளாட்சி அமைப்பில் ஒரு மாநகராட்சியாகும். தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமான மதுரையை, 1971 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதியிலிருந்து மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. அப்போது மொத்தம் 13 பஞ்சாயத்து பகுதிகளைச் சேர்ந்து மதுரை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. வைகை ஆற்றின் படுகையில் அமைந்துள்ள நகரமாகும். தமிழ் மொழியின் பிறப்பிடமாக மதுரை கூறப்படுகின்றது. தென்னிந்திய திருத்தலங்களின் நுழைவு வாயிலாகவும், உலகப்புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் அமைந்துள்ள இடமாக மதுரை விளங்குகின்றது.