மார்ட்டின் லூதர்
செருமானிய மதகுரு, இறையியலாளர் மற்றும் எழுத்தாளர் (1483-1546) / From Wikipedia, the free encyclopedia
மார்ட்டின் லூதர் (Martin Luther, நவம்பர் 10, 1483–பெப்ரவரி 18, 1546) ஒரு கிறித்தவத் துறவியும் செருமனிய மதகுருவும், இறையியலாளரும், பல்கலைக்கழகப் பேராசிரியரும், புரட்டஸ்தாந்தத்தின் தந்தையும், திருச்சபைச் சீர்திருத்தவாதியும் ஆவார். இவரது கருத்துக்கள் புரட்டஸ்தாந்தச் சீர்திருத்தத்தில் செல்வாக்குச் செலுத்தி மேனாட்டு நாகரிகத்தின் போக்கையே மாற்றியது. கிறித்துவத்தின் முதலாவது சமயச் சீர்திருத்தச் சிந்தனையாளர் மார்ட்டின் லூதர் தான் என்று கூற இயலாது. இவருக்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே பொகீமியாவில் ஜான் அஸ் என்பவரும், ஜான் வேக்கிளிஃப் என்ற ஆங்கிலேய அறிஞரும் தோன்றியிருந்தனர். இவருக்கு முன்னதாக, இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பீட்டர் வால்டர் என்ற பிரெஞ்சுக்காரரைத்தான் உண்மையில் முதலாவது சீர்திருத்தவாதி எனக் கூற வேண்டும். ஆனால், இவருக்கு முன்னர் தோன்றிய சீர்திருத்தங்கள் ஒரு குறிப்பிட்ட அளவோடு நின்று விட்டன.
மார்ட்டின் லூதர் | |
---|---|
1529இல் லூதர், லூக்காஸ் கிரனாச் | |
பிறப்பு | (1483-11-10)நவம்பர் 10, 1483 எயிஸ்லபென், புனித ரோமப் பேரரசு |
இறப்பு | பெப்ரவரி 18, 1546(1546-02-18) (அகவை 62) எயிஸ்லபென், புனித ரோமப் பேரரசு |
பணி | துறவி, மதகுரு, இறையியலாளர் |
சமயம் | லூதரனியம்; முதலில் கத்தோலிக்கத் திருச்சபை |
பெற்றோர் | ஹான்ஸ் லூதர் (15ஆம் நூற்றாண்டு); மார்கரட் லூதர் |
வாழ்க்கைத் துணை | கத்தரீனா ஃபோன் போரா |
பிள்ளைகள் | ஹான்சு, எலிசபெத், மகதலேனா, மார்ட்டின், பவுல், மார்கரட் |
கையொப்பம் |
லூதருடைய இறையியல், மதஞ்சார்ந்த அதிகாரம் விவிலியம் மட்டுமே என்னும் அடிப்படையில், திருத்தந்தையின் அதிகாரத்துக்குச் சவால் விடுத்தது...