மேற்குப் பாலைவனப் போர்த்தொடர்
From Wikipedia, the free encyclopedia
மேற்குப் பாலைவனப் போர்த்தொடர் (Western Desert Campaign) அல்லது பாலைவனப் போர் (Desert War) என்பது இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையின் முதல் கட்டத்தைக் குறிக்கிறது. இதில் மூன்று முறை அச்சு நாட்டுப் படைகள் நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் இருந்த எகிப்து மீது படையெடுத்தன. மூன்று முறையும் அவற்றின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு இறுதியில் துனிசியாவுக்குப் பின்வாங்கின.
மேற்குப் பாலைவனப் போர்த்தொடர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையின் பகுதி | |||||||
டோப்ருக்கில் பிரிட்டானிய மாட்டில்டா ரக டாங்குகள் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய இராச்சியம்
ஆத்திரேலியா | இத்தாலி ஜெர்மனி |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ரிச்சர்ட் ஓ கானர் (கைதி) ஃபிலிப் நியேம் (கைதி) நோயல் பெரசுஃபோர்ட்-பியர்சே ஆலன் கன்னிங்காம் நீல் ரிச்சி கிளாட் ஆச்சின்லெக் பெர்னார்ட் மோண்ட்கோமரி | இட்டாலோ பால்போ † ரொடால்ஃபோ கிராசியானி இட்டாலோ கரிபால்டி எட்டோரே பாஸ்டிகோ எர்வின் ரோம்மல் கெயார்க் ஸ்டம் † வில்லெம் ரிட்டர் வான் தோமா (கைதி) |
1940ல் ஐரோப்பிய மேற்குப் போர்முனையில் நாசி ஜெர்மனியின் படைகள் பல நேச நாடுகளைத் தோற்கடித்தன. ஐரோப்பாவில் ஜெர்மனிக்குக் கிடைத்த வெற்றியைப் போலவே வடக்கு ஆப்பிரிக்காவில் தனது படைகளும் வெற்றிபெற வேண்டும் என்று இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி விரும்பினார். ஆப்பிரிக்காவில் இத்தாலிய காலனியான லிபிய நாட்டிலிருந்து நேச நாட்டுக் கட்டுப்பாட்டிலிருந்த எகிப்து மீது இத்தாலியப் படைகள் படையெடுத்தன. ஆனால் நேச நாட்டுப் படைகளின் எதிர்த்தாக்குதலால் எகிப்திலிருந்து விரட்டப்பட்டன. முசோலினியின் உதவிக்கு இட்லர் தளபதி ரோம்மல் தலைமையிலான ஆப்பிரிக்கா கோர் என்ற படைப்பிரிவை வடக்கு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பினார். ரோம்மலின் தலைமையில் அச்சுப்படைகள் உடனடியாக மீண்டும் கிழக்கு நோக்கிப் படையெடுத்தன. ரோம்மலின் போர் திறனினால் நேச நாட்டுப் படைகளை முறியடித்து வேகமாக முன்னேறின. நேச நாட்டுக் கட்டுப்பாட்டிலிருந்த டோப்ருக் நகரை முற்றுகையிட்டன. 1941ல் நேச நாட்டுப் படைகள் பலமுறை முயன்று தோற்ற பின்னர் குரூசேடர் நடவடிக்கை மூலம் டோப்ருக் முற்றுகையை முறியடித்து ரோம்மலின் படைகளை மேற்கு நோக்கி விரட்டின. 1942ல் மீண்டும் கிழக்கு நோக்கிப் படையெடுத்த ரோம்மல் டோப்ருக்கைக் கைப்பற்றினார். இம்முறை எகிப்துள் எல் அலாமெய்ன் வரை முன்னேறிய அவரது படைகள் இரண்டாம் எல் அலாமெய்ன் சண்டையில் இறுதியாகத் தோற்கடிப்பட்டன. அத்துடன் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடந்த மேற்குப் பாலைவனப் போர்தொடர் முடிவுக்கு வந்தது. ரோம்மலின் படைகள் துனிசியாவுக்குப் பின்வாங்கியதால் துனிசியப் போர்த்தொடர் தொடங்கியது.
மேற்குப் பாலைவனப் போர்த்தொடரில் இரு தரப்பினரும் கிழக்கு மேற்காகப் பலமுறை முன்னேறிப்-பின்வாங்கினர். ஒவ்வொரு மோதலுக்கும் பல நூறு கிலோமீட்டர்கள் தூரம் படைகளை நடத்த வேண்டியிருந்ததால், ஐரோப்பாவிலிருந்து அனுப்பப்படும் எரிபொருள் மற்றும் உதிரி பாகங்கள் இப்போர்த்தொடரின் வெற்றிக்கு இன்றியமையாது போயின. நடுநிலக்கடலில் சரக்குக் கப்பல் போக்குவரத்தை நேச நாட்டு வான்படைகளும் கடற்படைகளும் கட்டுப்படுத்தத் தொடங்கியதால், மூன்றாண்டுகளுக்குப் பின் நேச நாட்டு எண்ணிக்கை மற்றும் ஆயுத பலம் ரோம்மலின் படைகளைக் காட்டிலும் பன்மடங்காக அதிகரித்ததால் அச்சுப்படைகள் தோல்வியடைந்தன.