இந்தியாவில் கம்பெனி ஆட்சி
From Wikipedia, the free encyclopedia
இந்தியாவில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி அல்லது கம்பெனி ஆட்சி (Company rule in India) or (Company Raj),[1]. 1757ஆம் ஆண்டில் நடந்த பிளாசி சண்டைக்குப்பின், வங்காள நவாப், பிரிட்டன் கிழக்கிந்திய கம்பேனி நிறுவனத்திடம் சரண் அடைந்த பின், இந்திய துணைக் கண்டத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பேனியின் ஆட்சி காலூன்றியது.[2] 1765 ஆண்டு முதல் வங்காளம், ஒரிசா மற்றும் பிகாரில் திவானி எனும் நிலவரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றது.[3]
கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி (இந்தியா) حاکمیت شرکت بر هند | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1757–1858 | |||||||||||||||||
குறிக்கோள்: Auspicio Regis et Senatus Angliae "பிரித்தானிய மன்னர் மற்றும் நாடாளுமன்றத்தின் கட்டளைப்படிB" | |||||||||||||||||
நிலை | பிரித்தானிய கிழக்கிந்திய கம்பேனி ஆட்சி | ||||||||||||||||
தலைநகரம் | கொல்கத்தா | ||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | ஆங்கிலம், பாரசீகம், மற்றும் பிற மொழிகள் | ||||||||||||||||
பிரித்தானிய இந்தியப் பேரரசின் தலைமை ஆளுனர் | |||||||||||||||||
• 1774–1775 | வாரன் ஹேஸ்டிங்ஸ்(முதல்) | ||||||||||||||||
• 1857–1858 | கானிங் பிரபு (இறுதி) | ||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||
10 மே 1757 | |||||||||||||||||
• அலகாபாத் ஒப்பந்தம் | 1765 | ||||||||||||||||
• ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கை | 1792 | ||||||||||||||||
• பாசின் உடன்படிக்கை 1802 (Treaty of Bassein) | 1802 | ||||||||||||||||
• யாந்தபொ உடன்படிக்கை (Treaty of Yandabo) | 1826 | ||||||||||||||||
• லாகூர் உடன்படிக்கை | 1846 | ||||||||||||||||
• இந்திய அரசுச் சட்டம் 1858 | 2 ஆகத்து 1858 | ||||||||||||||||
நாணயம் | ரூபாய் | ||||||||||||||||
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | IN | ||||||||||||||||
| |||||||||||||||||
தற்போதைய பகுதிகள் | வங்காளதேசம் இந்தியா மலேசியா மியான்மர் பாக்கித்தான் சிங்கப்பூர் இலங்கை யேமன் |
1773ஆம் ஆண்டில், கிழக்கிந்திய கம்பேனியின் ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்பின், தலைமை ஆளுனர், வாரன் ஏசுடிங்குசு நேரடி நிர்வாகத்தில், கல்கத்தா நகரை தலைமையகமாகக் செயல்பட்டது.[4] கிழக்கிந்திய கம்பேனி நிறுவனம் பல பங்குதாரர்களைக் கொண்ட, லாப நோக்கத்துடன் செயல்படும், தனியார் கூட்டு வர்த்தக நிறுவனம் ஆகும். இதன் நிர்வாகக் குழு மற்றும் தலைமையகம் லண்டனில் அமைந்திருந்தது. கிழக்கிந்திய கம்பேனி தனக்கென காவல் படை, இராணுவப் படை மற்றும் நீதிமன்றங்கள் கொண்டது.
கிழக்கிந்திய கம்பேனி நிர்வாகிகள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஊழல்களையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் தடுத்து நிறுத்திட, பிட்டின் இந்தியா சட்டம், பிரித்தானிய அரசு நடைமுறைப்படுத்தியது. கிழக்கிந்திய நிறுவனச் சட்டம், 1784, சிப்பாய்க் கிளர்ச்சி, 1857க்குப் பின், பிரித்தானிய அரசு கொண்டு வந்த இந்திய அரசுச் சட்டம், 1858க்கு பின்னர் முடிவடைந்தது. 1858ஆம் ஆண்டில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் கலைக்கப்பட்டு, இந்தியத் துணைக் கண்டத்தை, இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வில் தேறிய அதிகாரிகளின் நிர்வாகத்தில், பிரித்தானியப் பேரரசு தனது நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது.