வங்காளதேசம்
தெற்காசியாவிலுள்ள ஒரு நாடு / From Wikipedia, the free encyclopedia
வங்காளதேசம் (Bangladesh, வங்காள மொழி: বাংলাদেশ) ஒரு தெற்காசிய நாடாகும். இது பண்டைய வங்காளத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்தியா, மியான்மர் ஆகியவை இதன் அண்டை நாடுகளாகும். டாக்கா இதன் தலைநகரமாகும். இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைப் போன்று, இந்நாட்டிலும் வங்காள மொழியே பேசப்படுகிறது.
வங்காளதேச மக்கள் குடியரசு গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ கணப்பிரஜாதந்திரி பாங்க்லாதேஷ் | |
---|---|
நாட்டுப்பண்: அமர் சோனர் பங்களா என் தங்கமான வங்காளம் | |
தலைநகரம் | டாக்கா |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | வங்காளம் |
மக்கள் | வங்காளி / வங்களதேசீ |
அரசாங்கம் | நாடாளுமன்றக் குடியரசு[1] |
• குடியரசுத் தலைவர் | ஜுலூர் இரகுமான் |
• தலைமை அமைச்சர் | சேக் அசீனா |
• முதன்மை உசாவுதுணை | அப்துல் ஹமீது |
விடுதலை | |
• கூற்றம் | மார்ச் 26 1971 |
• வெற்றி நாள் | திசம்பர் 16 1971 |
பரப்பு | |
• மொத்தம் | 147,570 km2 (56,980 sq mi) (94ஆவது) |
• நீர் (%) | 7.0 |
மக்கள் தொகை | |
• 2007 மதிப்பிடு | 150,448,340[2] (7-ஆவது) |
• அடர்த்தி | 1,045/km2 (2,706.5/sq mi) (11-ஆவது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2020IMF[3] மதிப்பீடு |
• மொத்தம் | $917.805 பில்லியன் (29-ஆவது) |
• தலைவிகிதம் | $5,453 (136vவது) |
ஜினி (2000) | 31.8 மத்திமம் |
மமேசு (2007) | 0.547 Error: Invalid HDI value · 140-ஆவது |
நாணயம் | வங்காளத்தேசத் தாக்கா (BDT) |
நேர வலயம் | ஒ.அ.நே+6 (BDT) |
ஒ.அ.நே+6 (இல்லை) | |
அழைப்புக்குறி | 880 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | BD |
இணையக் குறி | .bd |
|
இந்நாட்டின் எல்லைகள் 1947-ஆம் ஆண்டு வங்காளப் பிரிவினையின் போது நிறுவப்பட்டது. 1947-ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப்பின், இப்பகுதி கிழக்கு பாக்கிஸ்தான் என்ற பெயரில் பாக்கிஸ்தான் நாட்டின் பகுதியாக இருந்தது. இருப்பினும், இப்பகுதிக்கும் மேற்கு பாக்கிஸ்தான் பகுதிக்கும் இடையிலான தொலைவு சுமார் 1600 கிலோமீட்டர். மேற்கு பாக்கிஸ்தானுக்கும் கிழக்கு பாக்கிஸ்தானுக்கும் இடையான எந்த போக்குவரத்தும் இந்தியாவின் வழியாகவே நடைபெறவேண்டும் என்ற நிலையில், மொழி வேறுபாடு காரணமாகவும், பொருளாதரப் புறக்கணிப்பு காரணமாகவும், கிழக்குப் பாக்கிஸ்தான் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டது. தனிநாடு கோரிக்கை முன் வைக்கப்பட்டது. 1971-ஆம் ஆண்டு கிழக்கு பாக்கிஸ்தான் பகுதி இந்தியாவின் துணைக் கொண்டு வங்காளதேச விடுதலைப் போருக்குப் பின் வங்காளத் தேசம் என்ற நாடாக அறிவிக்கப்பட்டது.
இதன்பின், வங்காள தேசம், ஏழ்மை, இயற்கை அழிவுகள், பஞ்சம் ஆகிய பல இன்னல்களை மட்டுமல்லாது, அரசியல் களத்திலும் இராணுவ ஆட்சி, பேச்சுரிமை மறுக்கப்பட்ட நிலை, ஊழல் போன்ற பல துயர்களைக் கடந்து வந்துள்ளது. 1991-ஆம் ஆண்டு மீண்டும் மக்களாட்சி மலர்ந்துள்ள நிலையில் சிறிதளவு நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது.
வங்காளதேசம் உலகின் எட்டாவது அதிக மக்கட்தொகை கொண்ட நாடாகும். வங்காளதேசக் குடியரசு நாடாளுமன்ற சனநாயக நாடாகும். இதன் நாடாளுமன்றம் ஜாதியோ சங்சத் என அழைக்கப்படுகிறது. இந்நாடு, வளமிக்க கங்கை-பிரமபுத்திரா கழிமுகத்தில் அமைந்துள்ளதோடு, வரலாற்று மற்றும் பல்வேறு கலாசார மரபுரிமைகளையும் கொண்டுள்ளது. ஊழல் மற்றும் வறுமை போன்ற பல்வேறு பாரிய சவால்கள் காணப்பட்டாலும், 1991-இலிருந்து நாட்டின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி பெற்றுள்ளது. மேலும், 1975 உடன் ஒப்பிடுகையில் தனிநபர் வருமானமும் இருமடங்காகியுள்ளது. வங்காளதேசம் அடுத்த பதினொரு பொருளாதார நாடுகளுள் ஒன்றாக அறியப்படுவதோடு, SAARC, BIMSTEC, OIC மற்றும் பொதுநலவாய நாடுகள் ஆகியவற்றின் உறுப்பினராகவும் விளங்குகிறது.
புவியியல் ரீதியாக நாடு கங்கை பிரமபுத்திரா கழிமுகத்தின் இருபக்கங்களிலும் அமைந்துள்ளது. இதனால், வருடாந்தம் வெள்ளப்பெருக்கு மற்றும் புயல் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறது. மேலும் இந்நாடு வறுமை, ஊழல், மிகைமக்கட்தொகை மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. எவ்வாறாயினும், வங்காளதேசம் மனித அபிவிருத்திச் சுட்டெண்ணில் சிறப்பாக முன்னேற்றம் கண்டுள்ளது.[4] மேலும், ஆயுள் எதிர்பார்ப்பை 23 வருடங்களால் உயர்த்திக் கொள்வதிலும், கல்வியில் பால்நிலைச் சமத்துவத்தை அடைவதிலும், மக்கட்தொகை அதிகரிப்பைக் குறைப்பதிலும், தாய்சேய் நலத்தை மேம்படுத்துவதிலும் வெற்றி கண்டுள்ளது.[5][6] நாட்டின் இரு பாரிய நகரங்களான டாக்கா மற்றும் சிட்டகொங் ஆகியவை நாட்டின் அண்மைய வளர்ச்சிக்குப் பாரிய உந்துசக்தியாக விளங்குகின்றன.