காசி விசாலாட்சி கோயில்
From Wikipedia, the free encyclopedia
காசி விசாலாட்சி கோயில் (Vishalakshi Temple or Vishalakshi Gauri Temple) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசி மாவட்டத்தில் அமைந்த வாரணாசி நகரத்தில் கங்கை ஆற்றின் மீர் காட் படித்துறையில் விசாலாட்சி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயிலாகும்.[1][2] 51 சக்தி பீடங்களில் இக்கோயிலும் ஒன்றாகக் கருதப்படுகிறது.
விரைவான உண்மைகள் காசி விசாலாட்சி கோயில், ஆள்கூறுகள்: ...
காசி விசாலாட்சி கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 25°18′32″N 83°0′39″E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | வாரணாசியில் உள்ள சக்தி பீடம் |
பெயர்: | விசாலாட்சி கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம்: | வாரணாசி |
அமைவு: | மிர் படித்துறை, வாரணாசி |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | விசாலாட்சி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கோயில் |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 1893 |
அமைத்தவர்: | நாட்டுக்கோட்டை நகரத்தார் |
மூடு
சதி தேவியின் கண்களும், காது வளையங்களும் பூமியின் புனிதத் தலமாக வாரணாசியில் விழுந்ததாகக் கருதப்படுகிறது.
முற்காலத்தில் அன்னபூரணியும் விசாலாட்சி தேவியர்கள் ஒன்றாகவே கருதப்பட்டு வந்ததது. பின்னர் இரு தேவியர்களுக்கும் தனித் தனித் கோயில்கள் அமைக்கப்பட்டதால், இரு தேவியர்களும் வேறுபட்டுக் காட்சியளிக்கின்றனர்.[3]