சங்காசியா
From Wikipedia, the free encyclopedia
சங்கிசா அல்லது சங்காசியா (Sankassa) பண்டைய இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின், பருகாபாத் மாவட்டத்தில், சிராவஸ்தி அருகே அமைந்த பண்டைய நகரமாகும். கௌதம புத்தர் சுவர்க்கத்தில் மூன்று மாதங்கள் தங்கி அபிதம்மத்தை தனது தாய் மாயாதேவிக்கு அருளிய பின்னர் பூமியில் இறங்கிய இடமே சங்காசியா என பௌத்த சாத்திரங்கள் கூறுகிறது.[1]
விரைவான உண்மைகள் சங்காசியா, இருப்பிடம் ...
சங்காசியா | |
---|---|
இருப்பிடம் | சிராவஸ்தி, பருகாபாத், உத்தரப் பிரதேசம் |
ஆயத்தொலைகள் | 27°20′02″N 79°16′16″E |
வகை | Settlement |
வகை | C |
மூடு
அசோகர் இவ்விடத்தில் புத்தரின் நினைவாக யானை தூபியையும், கௌதம புத்தரின் தாய் மாயாதேவிக்கு ஒரு விகாரையையும் நிறுவினார். 1842இல் அலெக்சாண்டர் கன்னிங்காம் சங்காசியா பௌத்த விகாரத்தை அகழ்வாராய்ச்சி செய்து கண்டெடுத்தார். பௌத்த சமயத்தவர்களுக்கு இவ்விடம் புனிதத் தலமாக விளங்குகிறது.