கௌதம புத்தர்
புத்த மதத்தைத் தோற்றுவித்தவர் / From Wikipedia, the free encyclopedia
கௌதம புத்தர் (Gautama Buddha) என்பவர் கி.மு 563க்கும், கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். இவரை அடிப்படையாகக் கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. இவர் கிறித்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தக்கூடிய, ஒரு பழமையான பௌத்த வழிபாட்டுத் தலத்தை தாம் கண்டறிந்துள்ளதாக நேபாளத்தில் உள்ள அகழ்வாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இவரது இயற்பெயர் “சித்தார்த்த கௌதமர்” என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும் அழைக்கப்பட்டார்.[4]
கௌதம புத்தர் | |
---|---|
தன் முதல் சமயச் சொற்பொழிவை ஆற்றும் புத்தரின் சிலை, சாரநாத். குப்தர் காலம், அண். பொ. ஊ. 5ஆம் நூற்றாண்டு. சாரநாத் தொல்பொருளியல் அருங்காட்சியகம் (பி(பி) 181).[lower-alpha 1] | |
சுய தரவுகள் | |
பிறப்பு | சித்தார்த்த கௌதமர் அண். பொ. ஊ. மு. 563 அல்லது பொ. ஊ. மு. 480 |
இறப்பு | அண். பொ. ஊ. மு. 483 அல்லது பொ. ஊ. மு. 400 (அகவை 80)[1][2][3][lower-alpha 3] |
நினைவிடம் | எரியூட்டப்பட்டார்; நீறு இவரை பின்பற்றியவர்களுக்கு இடையே பிரித்துக் கொள்ளப்பட்டது |
மனைவி | யசோதரை |
குழந்தைகள் | |
பெற்றோர்கள் |
|
அறியப்படுதல் | புத்த மதத்தை தோற்றுவித்ததற்காக |
வேறு பெயர்(கள்) | கௌதம புத்தர் சாக்கியமுனி ("சாக்கியர்களின் முனிவர்") |
பதவிகள் | |
முன் இருந்தவர் | காசாப புத்தர் |
பின் வந்தவர் | மைத்திரேயர் |
புத்த சமயத்தின் மிகவும் முக்கியமானவரென்ற வகையில், கௌதமருடைய வாழ்க்கையையும், வழி காட்டல்களையும், துறவிமட விதிகளையுமே, கௌதமரின் மறைவுக்குப்பின், சுருக்கி பௌத்த பிக்குகள் மனனம் செய்துவந்தார்கள். அவற்றுள் மிக முக்கியமானதாக தம்மபதம் விளங்குகிறது, பிற மத நூல்களைப் போன்று அல்லாமல் இந்நூல் மக்களின் சாதாரண பேச்சு வழக்கில் உருவாக்கப்பட்டது. மேலும் எளிய நடை இதன் சிறப்பம்சம் ஆகும். குரு - சீட பரம்பரையூடாக வாய்மொழி மூலம் கடத்தப்பட்டு வந்த இத்தகவல்கள், 100 வருடங்களுக்குப் பின்னர் திரிபிடகம் என்று வழங்கப்படும் நூலாக எழுத்துவடிவம் பெற்றது.