சாசானியப் பேரரசு
இசுலாமுக்கு முந்தைய கடைசி ஈரானியப் பேரரசு (224-651) / From Wikipedia, the free encyclopedia
சாசானியப் பேரரசு என்பது பொ. ஊ. 7 - 8ஆம் நூற்றாண்டுகளின் தொடக்க கால முஸ்லிம் படையெடுப்புக்கு முன்னர் ஈரானில் கடைசியாக நிலைத்திருந்த பேரரசு ஆகும். அலுவல் ரீதியாக இது இரான்ஷார் ("ஈரானியர்களின் நிலம் அல்லது பேரரசு")[12][13] என்று அறியப்பட்டது. சாசான் குடும்பத்தின் பெயரை இப்பேரரசு பெற்றிருந்தது. இது நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக நீடித்திருந்தது. பொ. ஊ. 224 முதல் பொ. ஊ. 651 வரை நீடித்திருந்தது. இதன் மூலமாக இது நீண்ட காலமாக நீடித்திருந்த பாரசீக ஏகாதிபத்திய அரசமரபாக திகழ்கிறது.[2][14] பார்த்தியப் பேரரசுக்கு பிறகு சாசானியப் பேரரசு உருவானது. பிந்தைய பண்டைக் காலத்தில் இதன் அண்டை நாட்டு எதிரியான உரோமைப் பேரரசுடன் (பொ. ஊ. 395க்கு பின்னர் பைசாந்தியப் பேரரசு) பாரசீகர்களை ஒரு முக்கியமான சக்தியாக இப்பேரரசு மீண்டும் நிறுவியது.[15][16][17]
சாசானியப் பேரரசு ஈரானியர்களின் பேரரசு | |||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
224–651 | |||||||||||||||||||||||||||||||
தலைநகரம் |
| ||||||||||||||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | |||||||||||||||||||||||||||||||
சமயம் |
| ||||||||||||||||||||||||||||||
அரசாங்கம் | நில மானிய முறைமை[7] | ||||||||||||||||||||||||||||||
ஷாஹின்ஷா | |||||||||||||||||||||||||||||||
• 224–241 | முதலாம் அர்தசிர் (முதல்) | ||||||||||||||||||||||||||||||
• 632–651 | மூன்றாம் யெஸ்டெகெடர்டு (கடைசி) | ||||||||||||||||||||||||||||||
வரலாற்று சகாப்தம் | பிந்தைய தொல்பழமைக் காலம் | ||||||||||||||||||||||||||||||
• கோர்மோசுதகன் யுத்தம் | 28 ஏப்ரல் 224 | ||||||||||||||||||||||||||||||
• ஐபீரியப் போர் | 526–532 | ||||||||||||||||||||||||||||||
• கடைசி உரோமானிய-பாரசீகப் போர் | 602-628 | ||||||||||||||||||||||||||||||
• சாசானிய உள்நாட்டுப் போர்[8] | 628–632 | ||||||||||||||||||||||||||||||
633–651 | |||||||||||||||||||||||||||||||
651 | |||||||||||||||||||||||||||||||
பரப்பு | |||||||||||||||||||||||||||||||
550[9][10] | 3,500,000 km2 (1,400,000 sq mi) | ||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
தற்போதைய பகுதிகள் |
|
இப்பேரரசை முதலாம் அர்தசிர் தோற்றுவித்தார். உள்நாட்டு பிரச்சனைகள் மற்றும் உரோமானியர்களுடனான போர்கள் ஆகியவற்றின் காரணமாக பலவீனமடைந்து இருந்த பார்த்திய பேரரசின் காலத்தில் ஆட்சிக்கு வந்த ஈரானிய ஆட்சியாளர் முதலாம் அர்தசிர் ஆவார். கடைசி பார்த்திய ஷாஹின்ஷா நான்காம் அர்தபனசை பொ. ஊ. 224இன் கோர்மோசுதகன் யுத்தத்தில் தோற்கடித்ததற்கு பிறகு இவர் சாசானிய அரசமரபை நிறுவினார். ஈரானின் நிலப்பரப்புக்களை விரிவாக்கியதன் மூலம் அகாமனிசியப் பேரரசின் மரபை மீண்டும் நிலை நாட்ட தொடங்கினார். அதன் உச்சபட்ச நிலப்பரப்பு விரிவாக்கத்தின் போது சாசானியப் பேரரசானது தற்கால ஈரான் மற்றும் ஈராக்கின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது. அனத்தோலியா மற்றும் எகிப்து உள்ளிட்ட கிழக்கு நடு நிலத்தில் இருந்து தற்கால பாக்கித்தானின் பகுதிகள், மேலும் தெற்கு அரேபியாவின் பகுதிகள் முதல் காக்கேசியா மற்றும் நடு ஆசியா வரையும் பரவியிருந்தது. ஒரு புராணக் கதையின் படி, சாசானியப் பேரரசின் வெக்சில்லாயிதாக (சின்னம்)[lower-alpha 1] தெராபசு கவியானி (மன்னர்களின் தரப் படி) இருந்தது.[18]
சாசானிய ஆட்சிக் காலமானது ஈரானிய வரலாற்றில் ஓர் உச்ச நிலையாக கருதப்படுகிறது.[19] ராசிதீன் கலீபாக்களின் கீழ் அரபு முஸ்லீம்களால் வெல்லப்பட்டு, இறுதியாக ஈரான் இஸ்லாமிய மயமாக்கப்பட்டதற்கு முன்னர் பண்டைக் கால ஈரானிய கலாச்சாரத்தின் உச்ச நிலையாக பல வழிகளில் இப்பேரரசு கருதப்படுகிறது. தங்களது குடி மக்களின் பல்வேறு வகை சமய நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரங்களிடம் சாசானியர்கள் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொண்டனர். ஒரு சிக்கலான மற்றும் மையப்படுத்தப்பட்ட அரசாங்க நிர்வாக அமைப்பை உருவாக்கினர். தங்களது ஆட்சியை முறைப்படுத்தும் மற்றும் ஒன்றிணைக்கும் சக்தியாக சரதுச சமயத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தனர்.[20] இவர்கள் மேலும் பிரமாண்டமான நினைவுச் சின்னங்கள், பொதுப் பணிகள், மற்றும் கலாச்சார மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் புரவலர்களாக விளங்கினர். இந்த பேரரசின் கலாச்சார தாக்கமானது இதன் நிலப்பரப்பு எல்லைகளையும் தாண்டி விரிவடைந்திருந்தது. இதில் மேற்கு ஐரோப்பா,[21] ஆப்பிரிக்கா, [22]சீனா மற்றும் இந்தியா[23] ஆகியவையும் அடங்கும். ஐரோப்பிய மற்றும் ஆசிய நடுக் கால கலையை வடிவமைப்பதிலும் உதவி செய்தது.[24] பெரும்பாலான இஸ்லாமிய கலாச்சாரத்தின் அடிப்படையாக பாரசீக கலாச்சாரம் உருவானது. முஸ்லிம் உலகம் முழுவதும் கலை, கட்டடக் கலை, இசை, இலக்கியம் மற்றும் தத்துவம் ஆகியவற்றின் மீது தாக்கத்தை இக்கலாச்சாரம் ஏற்படுத்தியது.[25]