சாவ் நடனம்
இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் காணப்படும் ஒருவகையான தற்காப்பு இந்திய நடனம். / From Wikipedia, the free encyclopedia
சாவ் நடனம் . இது ஜார்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா பிராந்தியங்களில் பண்டிகைகளின் போது அல்லது விழாக்காலங்களில் நிகழ்த்தப்படுகிறது [1] பாரம்பரியமும் தற்காப்புக் கலையும், பழங்குடி மக்களின் நாட்டுப்புறவியல் அம்சங்களும் கலந்த ஓர் இந்திய செவ்வியல் நடனமாகும். சாவ் நடனத்தின் தோற்றுய் கிழக்கு இந்தியா ஆகும். இதில் மூன்று பாணிகள் உள்ளன. வங்காளத்தின் புருலியா சாவ், ஜார்க்கண்டின் செரய்கெல்லா சாவ், மற்றும் ஒடிசாவின் மயூர்பஞ்ச் சாவ் என இவை நிகழ்த்தப்படும் இடத்திற்கு ஏற்ப பெயரிட்டு வழங்கப்படுகின்றன.
ஒரு நாட்டுப்புற நடனத்தின் அம்சங்களுடன் தற்காப்புக் கலைகள், கழைக்கூத்து, தடகள அம்சங்களும் கலந்த கருப்பொருள்களில் விழக்காலங்களில் நிகழ்த்தப்படும் சாவ் நடனம், சைவம், சாக்தம் மற்றும் வைணவம் ஆகியவற்றில் காணப்படும் மதக் கருப்பொருள்களுடன் கட்டமைக்கப்பட்ட நடனமாகவும் உள்ளது. நடன உடைகள் பாணிகளுக்கு ஏற்ப வேறுபடுகின்றன. புருலியா மற்றும் சராய்கேலா ஆகியவிடங்களில் கதாபாத்திரத்தை அடையாளம் காண முகமூடிகளைப் பயன்படுத்துகின்றனர்.[2] சாவ் நடனக் கலைஞர்களால் இயற்றப்பட்ட கதைகளில் இந்து காவியங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதம், புராணங்கள் மற்றும் பிற இந்திய இலக்கியங்கள் ஆகியவை அடங்கும். [3]
இந்த நடனம் பாரம்பரியமாக ஆண்கள் மட்டுமே கொண்ட குழுவால் ஆடப்படும். மேலும் இது ஒவ்வொரு ஆண்டும் வசந்த காலத்தில் பிராந்திய ரீதியாக கொண்டாடப்படுகிறது. இந்து சமய செவ்வியல் நடனங்களின் இணைவு மற்றும் பண்டைய பிராந்தியப் பழங்குடியினரின் மரபுகளிலிருந்து தோன்றிய ஒரு ஒத்திசைவான நடன வடிவமாக சாவ் நடனம் இருக்கலாம். [3] நடனம் காண்பதற்கு சிறப்பாகவும் பண்டிகை மற்றும் மத உணர்வில் பல்வேறு சமூக-பொருளாதார பின்னணிகளைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைப்பதாகவும் இருக்கிறது.[2] [3]