திபெத்தியர்களின் மைய நிர்வாகம்
From Wikipedia, the free encyclopedia
திபெத்தியர்களின் மைய நிர்வாகம் அல்லது நாடு கடந்த திபெத்திய அரசு (Central Tibetan Administration) (Tibetan: བོད་མིའི་སྒྲིག་འཛུགས་, Wylie: bod mi'i sgrig 'dzugs, THL: Bömi Drikdzuk , வார்ப்புரு:IPA-bo, translated as Exile Tibetan People's Organisation)[1] 1959-இல் திபெத் நாட்டை சீனா ஆக்கிரமித்த காரணத்தினால், திபெத்திலிருந்து வெளியேறிய 14-வது தலாய் லாமா தலைமையிலான திபெத்திய மக்களின் நாடு கடந்த அரசு மற்றும் நாடாளுமன்றம் இந்தியாவில் உள்ள இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்த காங்ரா மாவட்டத்தின், தரம்சாலாவில் 28 ஏப்ரல் 1959-இல் நிறுவப்பட்டது.
திபெத்தியர்களின் மைய நிர்வாகம் བོད་མིའི་སྒྲིག་འཛུགས་ Bod mi'i sgrig 'dzugs / Bömi Drikdzuk | |
---|---|
நாட்டுப்பண்: கியால்லு | |
நிலை | நாடு கடந்த அரசாங்கம் |
தலைமையிடம் | 176215, தரம்சாலா, காங்ரா மாவட்டம், இமாச்சலப் பிரதேசம், இந்தியா |
அலுவல் மொழி | திபெத்திய மொழி |
சமயம் | திபெத்திய பௌத்தம் |
வகை | நாடு கடந்த அரசாங்கம் |
அரசாங்கம் | |
• சிகியோங | லோப்சாங சாஙகே |
• அவைத் தலைவர் | பேமா ஜுஙக்னே |
சட்டமன்றம் | திபெத்தியர்களின் மைய நிர்வாகத்தின் நாடாளுமன்றம் |
உருவாக்கம் | 28 ஏப்ரல் 1959 |
நாணயம் | இந்திய ரூபாய் (நடைமுறையில்) (INR) |
1959-இல் அமைக்கப்பட்ட நாடு கடந்த திபெத்திய அரசை, இந்தியா ஆதரித்தாலும், சீனா இதுவரை அங்கீகரிக்கவில்லை.[2]
உலகாளாவிய திபெத்தியர்களும், இந்தியாவில் அகதிகளாக அடைக்கலம் அடைந்துள்ள திபெத்தியர்களும் இந்த மைய நிர்வாகத்தை ஆதரிக்கின்றனர். இந்தியாவில் அடைக்கலம் அடைந்த திபெத்தியர்கள், குறிப்பிட்ட காலத்திற்கு, வாக்கு செலுத்துவதன் மூலம் தங்களின் நாடு கடந்த திபெத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்கின்றனர்.[1] 11 பிப்ரவரி 1991 அன்று நாடு கடந்த திபெத்தி மைய நிர்வாக அரசு, 11 பிப்ரவரி 1991 அன்று நெதர்லாந்து நாட்டின் டென் ஹாக் நகரத்தில் செயல்படும் பிரதிநிதித்துவமற்ற நாடுகள் மற்றும் மக்கள் அமைப்பில் நிறுவன உறுப்பினரானது.[3][4]
14-வது தலாய் லாமா மைய நிர்வாகத்திற்கு ஆலோசனைகள் வழங்குவதுடன், திபெத்திய மக்களின் ஆன்மீகத் தலைவராக உள்ளார்.