திருநெல்வேலி
தமிழ்நாட்டிலுள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
இந்தக் கட்டுரை தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலியைப் பற்றியது. இலங்கையிலுள்ள நகருக்கு, திருநெல்வேலி (இலங்கை) என்பதைப் பாருங்கள்.
திருநெல்வேலி அல்லது நெல்லை (ஒலிப்புⓘ, Tirunelveli), என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' எனச் சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' எனச் சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி, திருநெல்வேலி ஆகும். இவ்வூர் அல்வாவிற்கு பெயர் பெற்றது.
விரைவான உண்மைகள் திருநெல்வேலி நெல்லை, நாடு ...
திருநெல்வேலி நெல்லை | |
---|---|
மாநகராட்சி | |
மேல் இடதுபுறத்தில் இருந்து கடிகாரம் சுழலும் திசையில்:நெல்லையப்பர் ஆலயம், திருநெல்வேலி சந்திப்பு, திருவள்ளுவர் பாலம் - வான்வழி பார்வை, மாநகராட்சி வளைவு, சபாநாயகர் செல்லப்பாண்டியன் பாலம் இரவு நேரத்தில், திருநெல்வேலி மாநகரம் - வான்வழி பார்வை, தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள சுலோச்சன முதலியார் பாலம் இரவு நேரத்தில், தேசிய நெடுஞ்சாலை 44, தாமிரபரணி ஆறு, திருநெல்வேலி மாநகராட்சி கட்டிடம் | |
அடைபெயர்(கள்): தென்னிந்திய ஆக்ஸ்போர்டு | |
ஆள்கூறுகள்: 8°42′49″N 77°45′24″E | |
நாடு | India |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி |
பகுதி | பாண்டிய நாடு |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | திருநெல்வேலி மாநகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | எஸ். ஞானதிரவியம் |
• சட்டமன்ற உறுப்பினர் | நயினார் நாகேந்திரன் |
• மாநகர முதல்வர் | காலியிடம் |
• மாவட்ட ஆட்சியர் | கே. பி. கார்த்திகேயன், இ.ஆ.ப. |
பரப்பளவு | |
• மாநகராட்சி | 189.9 km2 (73.3 sq mi) |
பரப்பளவு தரவரிசை | 5 |
ஏற்றம் | 73 m (240 ft) |
மக்கள்தொகை [1] | |
• மாநகராட்சி | 4,73,637 population_as_of = 2,011 |
• அடர்த்தி | 4,370/km2 (11,300/sq mi) |
• பெருநகர் | 4,97,826 |
இனங்கள் | தமிழர் |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் மொழி |
நேர வலயம் | இ.சீ.நே. (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு | 627 xxx |
தொலைபேசிக் குறியீடு | +91 (0)462, (0)4633 |
வாகனப் பதிவு | TN-72 |
சென்னையிலிருந்து தொலைவு | 624 கி.மீ (388 மைல்) |
கோவையிலிருந்து தொலைவு | 377 கி.மீ (235 மைல்) |
திருச்சியிலிருந்து தொலைவு | 300 கி.மீ (186 மைல்) |
மதுரையிலிருந்து தொலைவு | 163 கி.மீ (101 மைல்) |
இணையதளம் | tirunelveli corporation |
மூடு
திருநெல்வேலி மாநகரம், தன்பொருனை எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நகரம் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகச் சிலகாலம் செயல்பட்டது. இங்குள்ள நெல்லையப்பர் - காந்திமதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.[2]