தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் 2019
From Wikipedia, the free encyclopedia
2019 தெற்காசியா விளையாட்டுப் போட்டிகள் (2019 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்), இது நேபாள நாட்டில் நடைபெறும் 13-வது தெற்காசியா விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இப்போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு தெற்காசியா நாட்டில் நடைபெறும்.
நடத்தும் நகரம் | காட்மாண்டு, பொக்காரா & ஜனக்பூர் | ||
---|---|---|---|
நாடு | நேபாளம் | ||
பங்கேற்கும் நாடுகள் | 7 | ||
பங்கேற்கும் போட்டியாளர்கள் | 2715 | ||
நிகழ்ச்சிகள் | 28 விளையாட்டுகள் 308 போட்டிகள் | ||
துவக்க விழா | 1 டிசம்பர் | ||
நிறைவு விழா | 10 டிசம்பர் | ||
அலுவல்முறை துவக்கம் | வித்யா தேவி பண்டாரி (நேபாளக் குடியரசுத் தலைவர்)[1] | ||
போட்டியாளர் உறுதிமொழி | பரஸ் கட்கா (கிரிக்கெட் வீரர்)[2] | ||
நடுவர் உறுதிமொழி | தீபக் தபா (இறகுப்பந்தாட்ட வீரர்)[2] | ||
Torch lighter | தீபக் பிஸ்தா[3] | ||
Main venue | தசரத ரங்கசாலை விளையாட்டரங்கம் | ||
Website | www | ||
|
13-வது தெற்காசியா விளையாட்டுப் போட்டிகள் நேபாள நாட்டின் தேசியத் தலைநகரம் காட்மாண்டு மற்றும் பொக்காரா, ஜனக்பூர் ஆகிய மூன்று நகரங்களில் டிசம்பர் 1 முதல் 10 வரை நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா, நேபாளம், வங்காளதேசம், பூட்டான், மாலைதீவுகள், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட ஏழு தெற்காசிய நாடுகளின் 2,175 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளை நேபாளக் குடியரசுத் தலைவர் வித்யா தேவி பண்டாரி 1 டிசம்பர் 2019 அன்று காட்மாண்டு நகரத்தில் உள்ள தசரத ரங்கசாலை விளையாட்டரங்கத்தில் துவக்கி வைத்தார்.[4][5][6][7] இதில் 308 போட்டிகள் கொண்ட 28 விளையாட்டுக்களில், ஏழு தெற்காசியா நாடுகளின் 2715 விளையாட்டு வீரர்களும், வீரங்கனைகளும் பங்கு பெறுகிறார்கள்.