பந்தியாய் சிரே
From Wikipedia, the free encyclopedia
பந்தியாய் சிரே (கெமர்: ប្រាសាទបន្ទាយស្រី) என்பது, கம்போடியாவில் அமைந்துள்ள, பத்தாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட சிவாலயம் ஆகும். கம்போடியாவின் பண்டைய தலைநகர்களான யசோதரபுரம் மற்றும் அங்கோர் தாம் என்பவற்றின் அருகே[1], புகழ்பெற்ற அங்கோர் வாட்டிற்கு சற்று அப்பால் அமைந்து விளங்குகின்றது. உயர்தரமான சிற்பங்களும், கலைவனப்பும் நிறைந்த இக்கோயில், இன்றும் சுற்றுலாப்பயணிகளைப் பெருமளவில் கவர்வதுடன், "கெமெர் கலையின் மாணிக்கம்" என்று புகழப்படுகின்றது.[2]
விரைவான உண்மைகள் பந்தியாய் சிரே, ஆள்கூறுகள்: ...
பந்தியாய் சிரே | |
---|---|
ஆள்கூறுகள்: | 13°35′56″N 103°57′46″E |
பெயர் | |
பெயர்: | பந்தியாய் சிரே |
சமக்கிருத ஒலிப்பெயர்ப்பு: | உருத்திரபுரம் |
அமைவிடம் | |
நாடு: | கம்போடியா |
அமைவு: | அங்கோர் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சிவபெருமான் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கெமர் பேரரசு |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 967 |
அமைத்தவர்: | யஞ்னவராகன் |
மூடு