பயிர்ச்செய்கை
From Wikipedia, the free encyclopedia
பயிர்ச்செய்கை என்பது நமது தேவைக்காக பயிர்களை வளர்த்தெடுக்க செய்யப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் குறிக்கும். மண்ணைப் பதப்படுத்தல், பசளையிடல் மூலம் மண்ணை வளத்துடன் பேணிப் பாதுகாத்தல், நாற்றுமேடை அமைத்து இளம் பயிர்களைப் பேணல், நாற்று நடுதல், நீர்ப்பாசனம் செய்தல், பயிர்களை நோய், பீடைத் தாக்கங்களில் இருந்து பயிரைப் பாதுகாத்தல், பயிரை வளர்த்தெடுத்து, சிறந்த விளைச்சலைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் என்பனவாகும்.
தேவைக்கேற்ப, இடத்துக்கேற்ப, காலத்துக்கேற்ப, சூழ்நிலை வேறுபாடுகளுக்கேற்ப பயிர்ச்செய்கை முறைகளும் வேறுபடும்.