பிரான்சு சண்டை
From Wikipedia, the free encyclopedia
பிரான்சு சண்டை (Battle of France) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது பிரான்சின் வீழ்ச்சி (Fall of France) என்றும் அழைக்கப்படுகிறது. மே 10 – ஜூன் 25, 1940ல் நடைபெற்ற இச்சண்டையில் நாசி ஜெர்மனி பிரான்சைத் தாக்கி கைப்பற்றியது.
பிரான்சு சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின் பகுதி | |||||||
பிரான்சு சரணடைந்தபின் பாரிசிலுள்ள ஆர்கி-டி-டிரயோம்ஃப் தேசியச் சின்னத்தின் அருகில் அணுவகுத்துச் செல்லும் ஜெர்மானிய வீரர்கள் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
நாசி ஜெர்மனி இத்தாலி (ஜூன் 10 முதல்) | பிரான்சு ஐக்கிய இராச்சியம் பெல்ஜியம் நெதர்லாந்து கனடா செக்கஸ்லோவாக்கியா போலந்து லக்சம்பர்க் |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
கெர்டு வான் ரன்ஸ்டட் ஃபெடோர் வான் போக் வில்லெம் வான் லீப் இரண்டாம் உம்பர்ட்டோ | மாரீஸ் காமெலின் மாக்சிம் வேய்காண்ட் சார்லஸ் டி கோல் கோர்ட் பிரபு மூன்றாம் லியோபோல்டு ஹென்ரி விங்கெல்மான் விளாடிஸ்லா சிகோர்ஸ்கி |
||||||
பலம் | |||||||
நாசி ஜெர்மனி: 141 டிவிசன்கள், 7,378 பீரங்கிகள், 2,445 டாங்குகள், 5,638 விமானங்கள்[1][2][3] 3,350,000 படைவீரர்கள் ஜூன் 20 முதல் ஆல்ப்ஸ் பகுதியில் 300,000 இத்தாலியர்கள் | 144 டிவிசன்கள், 13,974 guns, 3,383 டாங்குகள், 2,935 விமானங்கள்[1][4] 3,300,000 troops ஜூன் 20 முதல் ஆல்ப்ஸ் பகுதியில் ~150,000 பிரெஞ்சுப் படைகள் |
||||||
இழப்புகள் | |||||||
நாசி ஜெர்மனி: 27,074 (மாண்டவர்), 110,034 (காயமடைந்தவர்) 18,384 காணாமல் போனவர் மொத்தத்தில் 49,000 பேர் இறந்தனர்[5] 1,236 விமானங்கள் அழிந்தன, 323 சேதமடைந்தன[6] 753 டாங்குகள்[6] இத்தாலி: 1,247 மாண்டவர் / காணாமல் போனவர், 2,631 காயமடைந்தவர், 2,151 உறைபனிக்கடியால் பாதிக்கப்பட்டனர் | 360,000 மாண்டவர் / காயமடைந்தவர், 1,900,000 கைப்பற்றப்பட்டவர் 2,233 விமானங்கள்[7] |
செப்டம்பர் 1, 1939ல் ஜெர்மானியப் படைகள் போலந்தைத் தாக்கியதால் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. போலந்தைக் கைப்பற்றிய பிறகு ஜெர்மனி அடுத்து மேற்குத் திசையில் தாக்கத் தயாரானது. இத்தாக்குதலை எதிர்பார்த்து நேச நாடுகள் பிரான்சு-ஜெர்மானிய எல்லையில் தயார் நிலையில் இருந்தன. நேச நாட்டுக் கூட்டணியில் பிரான்சு, பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகள் இடம் பெற்றிருந்தன. மே 10, 1940ல் ஜெர்மனியின் மேற்குப் போர்முனைத் தாக்குதல் ஆரம்பமாகியது. இத்தாக்குதலுக்கான ஜெர்மானிய மேல்நிலை உத்தி ”மஞ்சள் திட்டம்” (ஜெர்மன்:Fall Gelb) என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. அதன்படி ஜெர்மானியப் படைகள் மேற்கு எல்லையில் இரு இடங்களில் தாக்கின. பெல்ஜியத்தின் மீதான ஜெர்மானியத் தாக்குதலின் நோக்கம் நேச நாட்டுப் படைகளைத் திசை திருப்புவதாகும். பெல்ஜியத்தைப் பாதுகாக்க நேச நாட்டு முதன்மைப் படைகள் விரைந்து வந்தபின், அவற்றின் பின் பகுதியில் ஆர்டென் காடுகள் வழியாக ஜெர்மனியின் முக்கிய தாக்குதல் நடைபெற்றது. ஜெர்மானிய உத்தி வெற்றியடைந்து, நேச நாட்டு முதன்மைப் படைகளின் பெரும் பகுதி ஜெர்மானியக் கிடுக்கிப் பிடிக்குள் சிக்கிக் கொண்டது. ஜெர்மானியக் கிடுக்கியின் இரு கரங்களும் வேகமாக முன்னேறி மே மாத இறுதிக்குள் ஆங்கிலக் கால்வாயை அடைந்தன. ஜெர்மானியப் படைவளையம் வேகமாக இறுகினாலும் சிக்கிய நேசநாட்டுப் படைகளின் பெரும்பகுதி டன்கிர்க் துறைமுகம் வழியாக இங்கிலாந்துக்கு தப்பின. இத்துடன் (ஜூன் 4) பிரான்சு சண்டையின் முதல் கட்டம் பெரும் ஜெர்மானிய வெற்றியில் முடிவடைந்தது.
அடுத்த கட்டமாக பிரான்சின் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்றும் ஜெர்மானிய நடவடிக்கை (சிவப்புத் திட்டம் - Fall Gelb). ஜூன் 5ம் தேதி தொடங்கியது. பிரான்சின் மையப்பகுதி மீது ஜெர்மானியப் படையெடுப்பு ஆரம்பமாகியது. ஜூன் 10ம் தேதி இத்தாலியும் பிரான்சைத் தாக்கியது. இரு முனைத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பிரான்சின் படைகள் பின்வாங்கத் தொடங்கின. ஜூன் 14ம் தேதி பிரான்சின் தலைநகர் பாரிஸ் ஜெர்மானியர் வசமானது. போர்டியூ நகருக்கு இடம் பெயர்ந்த பிரான்சின் அரசுள் பெரும் குழப்பம் நிலவியது. அரசு கவிழ்ந்து தளபதி ஃபிலீப் பேதான் பிரதமராகப் பொறுப்பேற்றார். ஜூன் 17ம் தேதி பேதான் ஜெர்மனியிடம் சண்டை நிறுத்தம் கோரினார். ஜூன் 22ல் போர் நிறுத்தம் கையெழுத்தாகி பிரான்சு சரணடைந்தது. அடுத்த நான்காண்டுகள் ஜெர்மானிய-இத்தாலிய ஆக்கிரமிப்பில் கழிந்தன. பிரான்சு மூன்றாகப் பிரிக்கப்பட்டது - வடக்கு மற்றும் மேற்கு பகுதிகள் ஜெர்மானியரின் நேரடி ஆக்கிரமிப்பிலும், தென் கிழக்கில் சில பகுதிகள் இத்தாலியின் கட்டுப்பாட்டிலும் வந்தன. மீதமிருந்த பகுதிகள் பிரெஞ்சு அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தன. விஷி (Vichy) அரசாங்கம் என்றழைக்கப்பட்ட அந்த பிரெஞ்சு அரசுக்கு ஜெர்மானிய-இத்தாலிய ஆக்கிரமிப்பு பகுதிகளில் பெயரளவில் மட்டுமே அதிகாரமிருந்தது. இவ்வாறு பிரான்சு சண்டை அச்சு நாடுகளுக்கு பெருத்த வெற்றியுடன் முடிவடைந்தது.