பெல்ஜியம் சண்டை
From Wikipedia, the free encyclopedia
பெல்ஜியம் சண்டை (Battle of Belgium) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. மே 10-28, 1940ல் நடந்த இச்சண்டையில் நாசி இடாய்ச்சுலாந்து, (ஜெர்மனி) பெல்ஜியம் நாட்டைத் தாக்கிக் கைப்பற்றியது.
பெல்ஜியம் சண்டை | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின் பகுதி | |||||||||
பெல்ஜியம் சரணடைந்த மறுநாள் பெல்ஜிய தரைப்படையினர் ஒப்படைத்த பெல்ஜிய சுடுகலன்கள், தலைக்கவசங்கள் மற்றுமொரு விக்கர்ஸ் டிராக்டருடன் ஜெர்மானியப் படை வீரர்கள் |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
பெல்ஜியம் பிரான்சு ஐக்கிய இராச்சியம் நெதர்லாந்து[1] | நாசி இடாய்ச்சுலாந்து | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
மாரீஸ் காமெலின் மாகிசீம் வெய்காண்ட் கோர்ட் பிரபு மூன்றாம் லியோபோல்ட் எச். சி. விங்கெல்மேன் | கெர்ட் வான் ரண்ட்டுசிட்டட் ஃபெடார் வான் போக் |
||||||||
பலம் | |||||||||
144 டிவிசன்கள்[2] 13,974 பீரங்கிகள்[2] 3,384 டாங்குகள்[2][3] 2,249 விமானங்கள்[2][4] | 141 டிவிஷன்கள்[2] 7,378 பீரங்கிகள்[2] 2,445 டாங்குகள்[2] 5,446 விமானங்கள் (4,020 இயங்கு நிலையில்)[2] |
||||||||
இழப்புகள் | |||||||||
222,443+ (200,000 கைதிகள்)[5][6][7] ~900 விமானங்கள்[8][9] | தனியே தெரியவில்லை (பார்க்க இழப்புகள் பிரிவு) |
செப்டம்பர் 1939ல் நாசி இடாய்ச்சுலாந்து, போலந்தைத் தாக்கிக் கைப்பற்றியதால் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. செப்டம்பர் 1939 முதல் மே 1940 வரை நேச நாடுகளும் இடாய்ச்சுலாந்தும் அடுத்த கட்ட மோதலுக்காகக் தயாராகின. இந்த காலகட்டம் போலிப் போர் என்றழைக்கப்பட்டது. இடாய்ச்சுலாந்து அடுத்து பிரான்சைத் தாக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஜெர்மானியப் படைகளை எதிர்கொள்ள பிரிட்டன், பிரான்சிற்குப் படைகளை அனுப்பியது. இந்த படையெடுப்பு இடாய்ச்சுலாந்து-பிரான்சு எல்லையிலுள்ள மசினோ அரண்கோட்டுப் பகுதியில் நடைபெறும் என்று நேசநாடுகள் எதிர்பார்த்தன. ஆனால் இடாய்ச்சுலாந்தின் தளபதிகள் பலம் வாய்ந்த மசினோ அரண்களை நேரடியாக மட்டும் தாக்காமல் அதனைச் சுற்றி வளைத்து பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகள் வழியாகவும் தாக்கத் திட்டமிட்டனர். இந்த இருமுனைத் தாக்குதல் இடாய்ச்சுலாந்தின் மேற்குமுனைக்கான உதவியான ”மஞ்சள் திட்ட”த்தின் (இடாய்ச்சு: Fall Gelb ) ஓர் அங்கமாகும். நேசநாட்டுப் படைகள் பெல்ஜியத்தின் மீதான தாக்குதலே இடாய்ச்சுலாந்தின் முக்கிய தாக்குதல் என நம்பி தங்கள் படைகளில் சிறந்தவற்றை பெல்ஜியத்துக்கு அனுப்பின. இடாய்ச்சுலாந்தின் படைகளை பெல்ஜியத்தில் முறியடிக்க வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். ஆனால் மஞ்சள் திட்டத்தின்படி இது ஒரு ஏமாற்றுத் தாக்குதல். நேசநாட்டுப் படைகளைத் திசை திருப்புவதே இதன் நோக்கம். பெரும்பான்மையான நேசநாட்டுப் படைகள் பெல்ஜியத்துக்குச் சென்றவுடன் இன்னொரு பெரும் ஜெர்மன் படை மசினோ கோட்டை உடைத்து ஆர்டென் காடு வழியாக பிரான்சைத் தாக்கியது. இடாய்ச்சுலாந்தின் இந்த இருமுனைத் தாக்குதலும் இடாய்ச்சுலாந்தியக் கவச படையினரின் மின்னலடித் தாக்குதல் (பிளிடஃசுக்கிரீக்) உத்தியும் நேசநாட்டுப் படைகளை நிலை குலையச் செய்தன. பதினெட்டு நாட்களில் பெல்ஜியம் தாக்குப்பிடிக்க முடியாமல் சரணடைந்தது. அடுத்த மாதம் பிரான்சும் சரணடைந்தது.