மக்கள் தாவரத்தொடர்பியல்
From Wikipedia, the free encyclopedia
மக்கள் தாவரத்தொடர்பியல் (Ethnobotany) என்பது, ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியின் தாவரங்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும், அவர்தம் பண்பாடுகளுக்கும் இடையே நிலவும், அக்குறிப்பிட்ட மக்களின் பாரம்பரிய அறிவையும், அத்தாவரங்களின் நடைமுறை பயன்பாடுகளையும் ஆராயும் ஆய்வு ஆகும். இந்த ஆய்வில் ஒரு தாவரவியலாளர், ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியின் தாவரங்கள், மருந்துகள், உணவுகள், போதைப் பொருட்கள்,உடைகள் போன்ற, வாழ்க்கையின் பல உட்கூறுகளையும், உள்ளூர் தாவரங்களின் நடைமுறை பயன்பாடுகளை உள்ளடக்கிய, உள்ளூர் பழக்கவழக்கங்களையும் ஆவணப்படுத்த முயற்சி செய்கிறார்.[1] இரிச்சர்டு இவான்சு சூல்டெசு (Richard Evans Schultes), என்பவரே, மக்கள் தாவரத்தொடர்பியலின் தந்தை என்று போற்றப்படுகிறார்.[2] அவரின் கூற்று பின்வருமாறு:-
“மக்கள் தாவரத்தொடர்பியல் என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள பழமையான சமூகங்களால் பயன்படுத்தப்படும் தாவரங்களை ஆய்வு செய்வதாகும்.”[3]
இவர் காலத்திலிருந்தே, இத்துறையானது, பாரம்பரிய அறிவை எளிமையாகப் பெறுவதிலிருந்து, இப்போதுள்ள சமுதாயத்திற்கு, முதன்மையாக மருந்து வடிவில் பயன்படுத்துவதற்கு வளர்க்கப்பட்டு வந்துள்ளது.[4] அறிவுசார் சொத்துரிமைகள் மற்றும் நன்மை-பகிர்வு ஏற்பாடுகள் ஆகியன இத்துறைக்குரிய முக்கியமான பிரச்சினைகளாகவும், இடர்களாகவும் இருக்கின்றன.[4]