வங்காள மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
வங்காள இராஜதானி (Bengal Presidency) பிரித்தானிய இந்தியாவின் மிகப்பெரிய காலனி ஆதிக்கப் பகுதிகளில் ஒன்றாகும். 1757ல் நடைபெற்ற பிளாசி சண்டை மற்றும் 1764ல் நடைபெற்ற பக்சார் சண்டையில் கிழக்கிந்தியக் கம்பெனியின் படைகள், வங்காள நவாபை வெற்றிக் கொண்டு, 22 அக்டோபர் 1765ல் வங்காள இராஜதானி நிறுவப்பட்டது. வங்காள இராஜதானியின் தலைநகரம் கல்கத்தா நகரம் ஆகும்.
বেঙ্গল প্রেসিডেন্সি வங்காள மாகாணம் | |||||
இராஜதானி பிரித்தானிய இந்தியா | |||||
| |||||
கொடி | |||||
1858ல் பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தின் வரைபடம் | |||||
வரலாற்றுக் காலம் | காலனி ஆதிக்கம் | ||||
• | பக்சார் சண்டை, 1764 | 22 அக்டோபர் 1765 | |||
• | மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் | 1947 | |||
தற்காலத்தில் அங்கம் | இந்தியா, வங்காளதேசம், பர்மா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா |
வங்காள இராஜதானி, மேற்கில் தற்கால பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் முதல் கிழக்கில் பர்மா, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் பினாங்கு வரை பரவியிருந்தது.
கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியில் வங்காள மாகாண ஆளுநரே பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநராகவும் செயல்பட்டார்.
1905ல் வங்காளப் பிரிவினை மூலம் வங்காள மாகாணத்திலிருந்து, கிழக்கு வங்காளம் தனியாக பிரிக்கப்பட்டது. 1912ல் மீண்டும் வங்க மொழி பேசும் பகுதிகள் மீண்டும் வங்காள மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.
1947ல் இந்திய விடுதலைக்குப் பின்னர் வங்காள மாகாணத்தின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளை கிழக்கு பாகிஸ்தான் மற்றும் அசாம் எனப் பிரிக்கப்பட்டது.