1891 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
From Wikipedia, the free encyclopedia
இந்தியாவின் 1891 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பானது பிரித்தானிய அரசால் நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பானது இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், பர்மா ஆகிய பகுதிகளை உள்ளடக்கி நடத்தப்பட்டது.[2] இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது ஜெர்விஸ் அத்தேல்ஸ்டேனே பெயின்ஸ் என்பவர் ஆணையாராக இருந்தார். பைன்ஸ் 1881 கணக்கெடுப்பின்போது பயன்படுத்தப்பட்ட வகைப்பாட்டிலிருந்து மாற்றியமைத்தார். ராயல் புள்ளியியல் சமுதாயம் என்ற பத்திரிக்கையில் அவரது நினைவுக் குறிப்பு கட்டுரை வெளிவந்தது. அதில் "மதத்திலிருந்து சாதியை பிரிப்பது, இரண்டாவதாக, தொழிலை மையமாக மக்களை மாற்றுவது ஆகியவை" என்று மாற்றங்கள் விவரிக்கப்பட்டது. இதன் விளைவாக 300-பக்க பொது அறிக்கையை எழுதினார், இது "இலக்கிய வாசனை மற்றும் பரந்த புலமை" அடிப்படையில் புள்ளி விவரங்கள் பகுத்தாய்வை விளக்கினார்.[3]
விரைவான உண்மைகள் பொதுத் தகவல், நாடு ...
1891 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு | |
---|---|
பொதுத் தகவல் | |
நாடு | பிரித்தானிய இந்தியா |
முடிவுகள் | |
மொத்த மக்கள் தொகை | 287,000,000[1] |
மூடு