1929 லுஃப்தான்சா ஜங்கர்சு ஜி 24 விபத்து
From Wikipedia, the free encyclopedia
1929 லுஃப்தான்சா ஜங்கர்சு ஜி 24 விபத்து (1929 Luft Hansa Junkers G.24 Crash) என்பது, ஒரு வானூர்தி விபத்தாகும். இது, 1929-ஆம் ஆண்டு நவம்பர் 6-ம் திகதி புதன்கிழமையன்று, இங்கிலாந்து தென்கிழக்கு பிராந்தியத்தியமான சர்ரே (Surrey) பெருநகரத்தின் அருகிலுள்ள காட்ஸ்டோன் (Godstone) எனும் கிராமப்புறப் பகுதியில் இவ்விபத்து நிகழ்ந்ததாக அறியப்பட்டது.[1]
விபத்து சுருக்கம் | |
---|---|
நாள் | 1929 நவம்பர் 6 |
இடம் | ஐக்கிய இராச்சியம் சர்ரே, கிராய்டன், காட்ஸ்டோன். 51°14′54″N 0°04′07″W |
பயணிகள் | 5 |
ஊழியர் | 3 |
காயமுற்றோர் | 1 |
உயிரிழப்புகள் | 7 |
தப்பியவர்கள் | 1 |
வானூர்தி வகை | ஜங்கர்சு ஜி 24 |
வானூர்தி பெயர் | ஒபெர்ஸ்க்ளேசின் |
இயக்கம் | லுப்தான்சா |
வானூர்தி பதிவு | D-903 |
பறப்பு புறப்பாடு | கிராய்டன் வானூர்தி தளம், சர்ரே, ஐக்கிய இராச்சியம் |
சேருமிடம் | ஆம்ஸ்டர்டாம் மாநகர வானூர்தி தளம் நெதர்லாந்து |
இவ்வானூர்தி விபத்தின்போது சர்வதேச அட்டவணைப்படி ஐக்கிய ராஜ்ய சர்ரே, கிராய்டன் வானூர்தி தளத்திலிருந்து (Croydon Airport) - வானேறி, நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் மாநகர வானூர்தி தளத்தை நோக்கி, பயணித்ததாக மூலாதாரம் உள்ளது.[2]
லுஃப்தான்சா ஜங்கர்சு ஜி 24 விபத்து எனும் நிகழ்வில் , வானூர்தி சேவைப் பணியாளர்கள் குழுவின் உறுப்பினர்கள் மூவரும் (3), பயணிகளாக ஐவரும் (5), ஆக எட்டு (8) பேர்கள் பயணித்ததில் இவ்விபத்தில், 7 பேர்கள் கொல்லப்பட்டு, ஒருவர் (1) மட்டும் காயங்களுடன் உயிர்தப்பியதாக சான்றாதாரத்தில் காணப்பட்டது.[3]