அகிம்சை
காயப்படுத்த வேண்டாம்' அல்லது ‘இரக்க உணர்வு / From Wikipedia, the free encyclopedia
அகிம்சை, அல்லது அஹிம்சை (ஒலிப்புⓘ) (சமக்கிருதம்: अहिंसा, ஆங்கிலம்: Ahimsa, பாளி:[1] ‘காயப்படுத்தாமை' அல்லது ‘இரக்க உணர்வு' என்று பொருள்படும்) இந்திய சமயங்களில் ஒரு முக்கிய ஒழுக்கத்தைக் குறிக்கிறது.[2][3][4]
“ஹிம்சை” என்பது ‘காயம்’ அல்லது ‘தீங்கு’ ஆகும். ‘அஹிம்சை’ இதற்கு எதிா்மாறான பொருள் கொண்டது. அதாவது "காயம் ஏற்படுத்தாதீா்கள்", “தீங்கு செய்யாதீா்கள்” என்பது பொருள்.[5][6] அகிம்சை என்பது அறப் போராட்டத்தையும் குறிக்கும். அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும் என்று இந்திய மதங்கள் குறிப்பிடுகின்றன.[7]
சைனம், இந்து சமயம், பௌத்தம் ஆகியவற்றில் ‘அகிம்சை’ என்பது ஒரு முக்கிய அம்சமாகும்.[3] அகிம்சை என்பது பல பரிமாணக் கருத்துகளைக் கொண்டது.[8] பிறரின் காயத்தைத் தடுக்க, தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளுதல் என்றும் பொருள்படும். இந்து மதத்தின் பண்டைய அறிஞா்கள், அகிம்சைக் கொள்கைகளில் முன்னோடியாக இருந்தனா். காலப்போக்கில் அகிம்சை கொள்கைகளை பூா்த்தி செய்தனா். அகிம்சை, ஜைனத்தின் நெறிமுறை தத்துவத்தில் ஒரு அசாதாரண நிலையை அடைந்துள்ளது.[3][9] பொ.ஊ.மு. முதலாம் நூற்றாண்டுக்கும் பொ.ஊ. 5-ம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்த தமிழ்ப் புலவரான வள்ளுவர் அகிம்சை மற்றும் புலால் மறுத்தலை தனிநபர் நற்பண்புகளாக வலியுறுத்தி அவற்றை தனது நூலின் மைய போதனைகளாக அமைத்தார்.[10] மிகப் பிரபலமாக, மகாத்மா காந்தி அகிம்சை கொள்கையில் உறுதியாக இருந்தாா். ‘காயப்படுத்தாமை‘ என்பது ஒருவரின் சொல், செயல், வாா்த்தை மற்றும் எண்ணம் இவை அனைத்தையும் உள்ளடக்கியது.[11]