அன்ரன் பாலசிங்கம்
From Wikipedia, the free encyclopedia
அன்ரன் பாலசிங்கம் (அன்டன் பாலசிங்கம், Anton Balasingham; 4 மார்ச் 1938 – 14 திசம்பர் 2006) விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியராக அறியப்பட்டவர். இவர் இங்கிலாந்து குடியுரிமைக் கொண்டிருந்த இலங்கைத் தமிழராவார். இலங்கை அரசுடன் நடத்தப்பட்ட பெரும்பாலான பேச்சுவார்த்தைகளில் ஆரம்பம் முதல் பெப்ரவரி 22-23 இல் செனிவாவில் நடைபெற்ற, செனிவா முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை வரை விடுதலைப் புலிகளின் குழுவுக்கு தலைமை தாங்கி வந்தார். இங்கிலாந்தின் இலண்டன் சௌத் பேன்ங்க் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவருக்கு வேறு பல கல்வி நிலையங்களும் மதிப்புறுப் பட்டங்களை அளித்துள்ளன.
விரைவான உண்மைகள் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், பிறப்பு ...
தேசத்தின் குரல்[1] அன்ரன் பாலசிங்கம் | |
---|---|
பிறப்பு | ஏ. பி. இசுடானிசுலாசு (1938-03-04)4 மார்ச்சு 1938 மட்டக்களப்பு, இலங்கை |
இறப்பு | 14 திசம்பர் 2006(2006-12-14) (அகவை 68) இலண்டன், ஐக்கிய இராச்சியம் |
தேசியம் | பிரித்தானியர்[2] |
படித்த கல்வி நிறுவனங்கள் | சவுத் பாங்க் பாலிடெக்னிக் |
பணி | ஊடகவியலாளர், விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் |
பெற்றோர் | குழந்தைவேலு மார்க்கண்டு |
வாழ்க்கைத் துணை | அடேல் பாலசிங்கம் |
பிள்ளைகள் | இல்லை |
மூடு