ஆக்ரா கோட்டை
இந்தியாவின் ஆக்ரா நகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆக்ரா கோட்டை . / From Wikipedia, the free encyclopedia
ஆக்ரா கோட்டை இந்தியாவின் ஆக்ராவில் உள்ள முகலாயர் காலத்துக் கோட்டை ஆகும். இது இந்தியாவில் உள்ள கோட்டைகளில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற ஒரு கோட்டையாகும். பெரும் முகலாயப் பேரரசர்களான பாபர், உமாயூன், அக்பர், ஜகாங்கீர், ஷாஜகான், ஔரங்கசீப் போன்றவர்கள் இக்கோட்டையில் வாழ்ந்துள்ளார்கள். இங்குதான் மிகப்பெரிய நிதிக் கருவூலமும், நாணயத் தயாரிப்பிடமும் உள்ளது. இக் கோட்டை, "லா கிலா", "ஆக்ராவின் செங்கோட்டை" போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. இது உலகப் புகழ் பெற்ற நினைவுச் சின்னமான தாஜ்மகாலுக்கு வட கிழக்கில் 2.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வெளிநாட்டுத் தூதர்கள், பயணிகள், உயர் அலுவலர்கள் போன்று இந்திய வரலாற்றை உருவாக்கிய பலரும் இந்தக் கோட்டையில் காலடி பதித்துள்ளனர்.
விரைவான உண்மைகள் ஆக்ரா கோட்டை, வகை ...
ஆக்ரா கோட்டை | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | iii |
உசாத்துணை | 251 |
UNESCO region | உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும் |
ஆள்கூற்று | 27°10′46″N 78°01′16″E |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1983 (7ஆவது தொடர்) |
மூடு