ஆந்திரே சாகரவ்
சோவியத் ஒன்றிய அணுக்கருவியலாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் / From Wikipedia, the free encyclopedia
ஆந்திரே திமித்ரியேவிச் சாகரவ் (Andrei Dmitrievich Sakharov, உருசியம்: Андре́й Дми́триевич Са́харов; மே 21, 1921 – திசம்பர் 14, 1989) உருசிய அணுக்கருவியலாளரும், சோவியத் அதிருப்தியாளரும், அணுவாயுதக் குறைப்பு, அமைதி மற்றும் மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளரும் ஆவார்.[1]
ஆந்திரே திமித்ரியேவிச் சாகரவ் Andrei Dmitrievich Sakharov | |
---|---|
மார் 1, 1989 அறிவியல் மாநாடொன்றில் | |
இயற்பெயர் | Андрей Дмитриевич Сахаров |
பிறப்பு | (1921-05-21)21 மே 1921 மாஸ்கோ, சோவியத் ஒன்றியம் |
இறப்பு | 14 திசம்பர் 1989(1989-12-14) (அகவை 68) மாஸ்கோ, உருசியா, சோவியத் ஒன்றியம் |
வாழிடம் | மாஸ்கோ, சோவியத் ஒன்றியம் |
குடியுரிமை | சோவியத்து |
துறை | அணுக்கருவியல் |
கல்வி கற்ற இடங்கள் |
|
அறியப்படுவது |
|
விருதுகள் |
|
துணைவர் | கிளாவிடியா விக்கிரீவா (1943–1969; மனைவி மரணம்) எலனா பானர் (1972–1989; அவர் மரணம்) |
சோவியத் ஒன்றியத்தின் அணுவாயுதத் திட்டத்தின் மூன்றாம் கருத்துரு எனக் குறியீடு இடப்பட்ட அணுவெப்பாற்றல் ஆயுதங்களின் வடிவமைப்பிற்காக மிகவும் அறியப்பட்டார். பின்னதாக சோவியத் ஒன்றியத்தில் மனித உரிமைகளுக்காகவும் குடிமைச் சீர்திருத்தங்களுக்காகவும் போராடினார். இதற்காக அரசின் துன்புறுத்தல்களை எதிர்கொண்டார். இவரது முயற்சிகளுக்காக 1975இல் சாகரவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரைப் போற்றும் வண்ணம் ஐரோப்பிய நாடாளுமன்றம் ஆண்டுதோறும் மனித உரிமைகளுக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்ட நபர்களுக்கும் அமைப்புகளுக்கும் சாகரவ் பரிசு வழங்கி வருகின்றது.[2]