இயேசுவின் பணிவாழ்வு
iyesu kiristhuvin valkaiyum ooliyamum / From Wikipedia, the free encyclopedia
இயேசுவின் பணிவாழ்வு அல்லது இயேசுவின் மறைபணி என்பது யோர்தான் ஆற்றில் இயேசு கிறித்து திருமுழுக்கு பெறுவதில் தொடங்கி அவரின் இறுதி இராவுணவு முடிய உள்ள அவரின் வாழ்க்கைப் பகுதியினைக் குறிக்கும்.[1] லூக்கா நற்செய்தி (3:23) இயேசு தம் பணியைத் தொடங்கியபோது, அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது எனக்குறிக்கின்றது.[2][3] வரலாற்றாசிரியர்களின் படி இயேசுவின் பணிவாழ்வு கி.பி 27-29 இல் துவங்கி கி.பி 30-36 இல் முடிவடைந்திருக்கலாம்.[2][3][4]
கலிலேயாவில் தொடக்கப் பணிவாழ்வு இயேசுவின் திருமுழுக்கிற்குப் பிறகு சோதனைக்காக கலிலேயாவுக்குத் திரும்பி வருவதிலும்.[5] கலிலேயாவில் பணியாற்றி தனது முதல் சீடர்களை தேர்வுசெய்வதிலும் அடங்குகின்றது.[1][6] கலிலேயாவில் பணிவாழ்வில் திருத்தூதர்களைத் தேர்வு செய்வதிலும், இயேசுவின் பணிவாழ்வின் பெரும் பகுதியுமாக அமைகின்றது.[7][8] கலிலேயாவில் இறுதி பணிவாழ்வு திருமுழுக்கு யோவானின் இறப்பில் தொடங்கி எருசலேம் செல்ல இயேசு ஆயத்தமாவதற்கு முன் முடிவடைகின்றது.[9][10] யூதேயாவில் இயேசுவின் பணிவாழ்வில் யூதேயாவழியாக எருசலேம் செல்ல இயேசு ஆயத்தமாகின்றார்.[11][12][13][14][13][14] இக்காலத்தில் அவர் தான் முன்னர் திருமுழுக்கு பெற்ற யோர்தார் ஆற்றங்கரைப்பகுதிகளில் பணியாற்றினார்.[15][16][17]
இயேசுவின் பணிவாழ்வின் இறுதி வாரம் எருசலேமில் நிகழ்ந்தது. இது திருப்பாடுகளின் வாரம் எனவும் அழைக்கப்படுகின்றது. இது இயேசு வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைதலில் தொடங்குகின்றது.[18] எல்லா நற்செய்தி நூல்களும் இயேசுவின் பணிவாழ்வின் பிற கட்டங்களைவிட இதனையே அதிகம் (மூன்றில் ஒரு பங்கு) விவரிக்கின்றன.[19]