இறவாப்படை (அகாமனிசியப் பேரரசு)
அகாமனிசியப் பேரரசுக்காகப் போராடிய வீரர்களின் உயரடுக்கு படை / From Wikipedia, the free encyclopedia
இறவாப்படை அல்லது இம்மார்டல்ஸ் (Immortals, பண்டைக் கிரேக்கம்: Ἀθάνατοι Athánatoi ) அல்லது பாரசீக இம்மார்டல்ஸ் (Persian Immortals) என்பது எரோடோட்டசால் குறிப்பிடப்படும் அகாமனியப் பேரரசின் இராணுவத்தில் 10,000 வீரர்களைக் கொண்ட உயரடுக்கு கனரக காலாட்படை பிரிவுக்கு வழங்கப்பட்ட பெயர் ஆகும். பாரசீகப் பேரரசின் தொழில்முறை இராணுவமாக இருந்ததுடன், பேரரசின் காவலராக பங்களித்து இரட்டை திறன்களில் பணியாற்றியது. இது முதன்மையாக பாரசீகர்களைக் கொண்டிருந்தாலும், இறவாப்படையில் மீடியர் மற்றும் ஈலாம்களும் அடங்குவர். அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் போதிய அளவில் இல்லாததால், வரலாற்றில் அத்தியாவசிய கேள்விகளுக்கு பதிலில்லாமல் உள்ளது. [2]