கதிர்காமம்
இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள நகரம் / From Wikipedia, the free encyclopedia
கதிர்காமம் (Kataragama) (சிங்களம்:කතරගම) என்பது இலங்கையின் பௌத்தர்களுக்கும், இந்துக்களுக்கும், பழங்குடி வேடுவர்களுக்குமான ஒரு புனித யாத்திரை நகரமாகும். தென்னிந்தியாவிலிருந்தும் இங்கு வருகின்றனர். இந்த நகரத்தில் கதிர்காமம் கோயில் உள்ளது. இது கந்தக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஆலயமாகும். கதிர்காமன் தெய்வம் என்றும் அழைக்கப்படுகிறது. கதிர்காமம் இலங்கையின் ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து 228 கி.மீ. தொலைவிலுள்ளது. இது இடைக்காலத்தில் ஒரு சிறிய கிராமமாக இருந்தபோதிலும், இன்று இது இலங்கையின் தென்கிழக்கு பிராந்தியத்தில் காடுகளால் சூழப்பட்ட வேகமாக வளர்ந்து வரும் நகரமாகும்.
கதிர்காமம்
කතරගම | |
---|---|
ஆள்கூறுகள்: 6°25′00″N 81°20′00″E | |
நாடு | இலங்கை |
மாகாணங்கள் | ஊவா |
மாவட்டம் | மொனராகலை |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை நேர வலயம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+6 (கோடைக் காலம்) |
கிமு 6ஆம் நூற்றாண்டில் பிராந்திய மன்னன் மகாசேனனால் கட்டப்பட்டதாக நம்பப்படும் பண்டைய கிரி விகாராமும் பௌத்தத் தாது கோபுரமும் இப்பகுதியின் முக்கிய ஈர்ப்பாகும் [1] இந்த நகரம் கி.மு.வில் கடந்த நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஒரு மதிப்புமிக்க வரலாற்றைக் கொண்டுள்ளது. உருகுணை இராச்சியத்தின் ஆட்சிக் காலங்களில் பல சிங்கள மன்னர்களின் அரசாங்க இருக்கையாக இருந்துள்ளது.[2] 1950களிலிருந்து, பொதுப் போக்குவரத்து, மருத்துவ வசதிகள், வணிக மேம்பாடு, விடுதி சேவைகளில் அடுத்தடுத்த அரசாங்கங்கள் முதலீடு செய்ததன் மூலம் நகரம் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. இது பிரபலமான யலா தேசிய வனத்தை அடுத்துள்ளது.