காராப்புழா அணை
கேரளத்தின் வயநாடு மாவட்டடத்ததில் உள்ள அணை / From Wikipedia, the free encyclopedia
காராப்புழா அணை (Karapuzha Dam) என்பது கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் அணையாகும். இது இந்தியாவின் மிகப் பெரிய மண் அணைகளில் ஒன்றாகும். காராபுழா அணை கபினி ஆற்றின் துணை ஆறான காராபுழா ஆற்றின் குறுக்கே கேரளத்தின் வயநாட்டின் பசுமையான, இயற்கையழகு நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. அணையின் கட்டுமானம் 1977 இல் தொடங்கி, 2004 இல் நிறைவடைந்தது. அணையின் நோக்கம் நீர்ப்பாசனம் ஆகும். இதன் இடது மற்றும் வலது கரை கால்வாய்களின் கட்டுமானப் பணிகள் நடந்துவருகின்றன.[2] [3]
விரைவான உண்மைகள் காராப்புழா அணை, அதிகாரபூர்வ பெயர் ...
காராப்புழா அணை | |
---|---|
அணையின் மேல்நிலைத் தோற்றம் | |
அதிகாரபூர்வ பெயர் | Karapuzha Dam |
நாடு | இந்தியா |
அமைவிடம் | கேரளம், வயநாடு |
புவியியல் ஆள்கூற்று | 11°37′03.13″N 76°10′19.34″E |
நோக்கம் | பாசனம் |
நிலை | செயல்பாட்டில் உள்ளது |
கட்டத் தொடங்கியது | 1977 |
திறந்தது | 2004 |
அணையும் வழிகாலும் | |
வகை | கட்டு, மண் நிறப்பு |
தடுக்கப்படும் ஆறு | காராப்புழா ஆறு |
உயரம் | 28 m (92 அடி) |
நீளம் | 625 m (2,051 அடி) |
வழிகால் வகை | திறந்த, வட்டத்துண்டு மதகு-கட்டுப்பாடு |
வழிகால் அளவு | 969 m3/s (34,220 cu ft/s)[1] |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 76,500,000 m3 (62,020 acre⋅ft) |
செயலில் உள்ள கொள் அளவு | 72,000,000 m3 (58,371 acre⋅ft) |
செயலற்ற கொள் அளவு | 4,500,000 m3 (3,648 acre⋅ft) |
மேற்பரப்பு பகுதி | 8.55 km2 (3 sq mi) |
இயல்பான ஏற்றம் | 763 m (2,503 அடி) |
மூடு