சனிவார்வாடா
From Wikipedia, the free encyclopedia
சனிவார்வாடா (Shaniwarwada) (Śanivāravāḍā) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்தின் மையத்தில் அமைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையுடன் கூடிய அரண்மனையாகும். சனிவார்வாடா கோட்டை [1] 18ம் நூற்றாண்டில் இந்திய அரசியலின் மையமாக விளங்கியது.[2] சனிவார்வாடா 1818 வரை, மராத்தியப் பேரரசின் பிரதம அமைச்சராக இருந்த பேஷ்வாக்களின் அரண்மனையாக விளங்கியது. மூன்றாம் ஆங்கிலேயே - மராத்தியப் போரின் முடிவில், சனிவார்வாடா கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர்.
சனிவார்வாடா | |
---|---|
சனிவார்வாடா கோட்டையின் முதன்மை வாயில் | |
அமைவிடம் | புனே நகரம், மகாராட்டிரா இந்தியா |
கட்டப்பட்டது | 1732 |
கட்டிட முறை | மராத்தியக் கட்டிடக் கலை |
எழு அடுக்கள் கொண்டிருந்த சனிவார்வாடா கோட்டை அரண்மனைக் கட்டிடங்கள் 27 பிப்ரவரி 1828ல் பெருமளவில் தீப்பற்றி எரிந்தது. தற்போது தரை தளம் மட்டுமே எஞ்சியுள்ளது. இக்கோட்டையை தற்போது இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரித்து வருகிறது. இக்கோட்டை மகாராட்டிரா மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளது. இக்கோட்டையில் நாள்தோறும் மாலை வேளைகளில் பேரரசர் சிவாஜியின் ஆட்சி முறை மற்றும் கோட்டையின் வரலாறு குறித்து ஒலி ஒளிக் காட்சி மூலம் விளக்கப்படுகிறது.