செம்பரா மலைமுடி
From Wikipedia, the free encyclopedia
செம்பரா என்பது கேரளாவின் வயநாடு மாவட்டத்திலேயே உயரமான மலைமுடி ஆகும். இது கடல் மட்டத்தில் இருந்து 2100 மீ. உயரமானது. மெப்படி நகரத்துக்கு அருகிலுள்ள இது மாவட்டத் தலைநகரான கல்பெட்டா-விலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. வயநாடு மலைக்கூட்டங்களின் பகுதியான இது மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டின் நீலகிரி மலைத்தொடர்களையும் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள வெல்லாரி மலைகளையும் இணைக்கும் விதமாக இச்சிகரம் அமைந்துள்ளது. மெப்படி நகரிலிருந்து நடந்தே மலையுச்சியை அடையலாம். செம்பரா மலை உச்சியை அடைவதற்கு மூன்று மணி நேரம் ஆகும். மலை ஏறுவதற்கு மேப்படி நகரில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் அனுமதி பெறுவது அவசியம். காலை 7 மணி முதல் மதியம் 2 மணிவரை நுழைவுச்சீட்டு வழங்கப்படுகிறது மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மலையேற்றத்துக்கான கருவிகளையும் வழிகாட்டிகளையும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டண அடிப்படையில் ஏற்பாடு செய்து தருகின்றது. வழிகாட்டிகளின் உதவி இல்லாமல் செம்பரா மலை ஏறுவது சற்றுச் சிரமமாக இருக்கும்.
செம்பரா மலைமுடி Chembra Peak | |
---|---|
செம்பரா மலைமுடியின் தோற்றம் | |
உயர்ந்த இடம் | |
உயரம் | 2,100 m (6,890 அடி)[1] |
ஆள்கூறு | 11°30′44″N 76°05′22″E |
பெயரிடுதல் | |
தாயகப் பெயர் | ചെമ്പ്ര കൊടുമുടി Error {{native name checker}}: parameter value is malformed (help) |
புவியியல் | |
மூலத் தொடர் | மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் |
ஏறுதல் | |
எளிய அணுகு வழி | Hike |