டேனியல் செல்வராஜ்
திருநெல்வேலி மாவட்ட எழுத்தாளர்கள் / From Wikipedia, the free encyclopedia
தானியல் செல்வராசு (டி. செல்வராஜ், சனவரி 14,1938 - திசம்பர் 20 , 2019) ஓர் முற்போக்குத் தமிழ் எழுத்தாளரும் வழக்கறிஞரும் ஆவார். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். இவர் நெல்லை தென்கலம் சிற்றூரைச் சேர்ந்த[1] செல்வராஜ் திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். பல்வேறு சிறுகதைகளையும் புதினங்களையும் எழுதியுள்ள இவருக்கு திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த தோல் தொழிலாளர்களின் அவலநிலையை விவரிக்கும் தோல் என்ற படைப்பிற்காக 2012ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.[1][2][3] 1975-இல் செம்மலர் எழுத்தாளர்கள் 32 பேர்கூடி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்கிற அமைப்பைத் தொடங்கியபோது அதில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர் .இவர் பொதுவுடமைக்கொள்கையில் பிடிப்புடையவர்.
விரைவான உண்மைகள் டி. செல்வராஜ், பிறப்பு ...
டி. செல்வராஜ் | |
---|---|
டி.செல்வராஜ் | |
பிறப்பு | (1938-01-14)சனவரி 14, 1938 தென்கலம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு |
இறப்பு | திசம்பர் 20, 2019(2019-12-20) (அகவை 81) |
பணி | எழுத்தாளர், வழக்கறிஞர் |
அறியப்படுவது | பொதுவுடமைச் சார்பு |
வாழ்க்கைத் துணை | பாரத புத்திரி |
பிள்ளைகள் | சித்தார்த்தன் பிரபு, சார்வாகன் பிரபு, வேத ஞானலெட்சுமி (மகள்) |
மூடு